India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் வர்மன் (25) பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் பகுதிக்கு வசூல் செய்ய சென்றபோது அடையாளம் தெரியாத 3பேர் வழிமறித்து கல்லால் தாக்கியதில் காயம் அடைந்த மனோஜ் வர்மன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புகாரின் பேரில் அடையாளம் தெரியாதமூன்று பேரை பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளாஸ்திரியிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பஸ் ஒன்றில் சோதனை செய்த 10 கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appஇல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளூர் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <
வரதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி ( 26 ), இவர் நேற்று வீட்டின் மாடிக்கு சென்று இரும்பு கம்பியை கொண்டு எலுமிச்சை பழங்களை பறிக்க முயன்றார். அப்போது மின் கம்பியில் அவர் கையில் வைத்திருந்த கம்பி பட்டு மின்சாரம் தாக்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் லோகேஸ்வரியை ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 366 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த சாம்குமார் என்ற இளைஞர் தனது வாகனம் ஓட்டி வந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டில் நடந்து சென்ற கூலி தொழிலாளி ராஜகோபால் மீது மோதியது இந்த விபத்தில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். உடன் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணை, துணை இயக்குநர்கள் இருந்தனர்.
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். உடன் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணை, துணை இயக்குநர்கள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.