India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சம்பவத்தன்று, சிந்தியாவின் தந்தை சாமுவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். அந்த நேரத்தில் வெளிநாடு செல்வது பற்றி பேசியதால் எபினேசர் – சிந்தியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சாமுவேல் சடலத்தை வைத்துக்கொண்டு இருவரும் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த எபினேசர், சிந்தியாவை தாக்கி வேகமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், சிந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேலுரைச் சேர்ந்தவர்கள் சிந்தியா மற்றும் அவரது தந்தை சாமுவேல். சிந்தியாவுக்கு, திருமணமாகாத எபினேசர் என்பவர் உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தந்தை சாமுவேல் டயாலிசிஸ் நோயாளி என்பதால், சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. இதனால், சிந்தியாவுக்கும், எபினேசருக்கும் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி சென்னை வந்து செல்ல சிரமமானதால், கடந்தாண்டு செப்., மாதம் இருவரும் சென்னையில் வீடு எடுத்து தங்கினர்.
திருமுல்லைவாயல் பகுதியில் தந்தை, மகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமியோபதி மருத்துவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டியிருந்த வீட்டுக்குள் 4 மாதங்களாக கிடந்த தந்தை சாமுவேல், மகள் விந்தியா உடல்களை போலீசார் கைப்பற்றினர். விந்தியாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஓமியோபதி மருத்துவர் எபிநேசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலை ரத்து செய்யக்கோரி வழக்கும் தொடரப்பட்டிருந்த நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. மீண்டும் முழுமையான ஆய்வு நடத்த உத்தரவிட்டு, 2024-ல் வழங்கப்பட்ட ஒப்புதலை தீர்ப்பாயம் நிறுத்திவைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்து, முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி தலைமையில், திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி நகரம், பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியைச் சேர்ந்த 500 பேர் நேற்று (ஜன.29) அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்கள் (சிவில்) உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 2 வருடங்கள் அனுபவம் கொண்ட 30 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் பிப்.10ஆம் தேதிக்குள் chennaimetrorail.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.62,000 சம்பளம். இந்த முயற்சி, பொறியியல் பணியாளர்களிடையே பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும். ஷேர் பண்ணுங்க
கடம்பத்துார், நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (70), கடந்த 7ஆம் தேதி வீட்டின் வெளியே இருந்த அடுப்பில் வைக்கப்பட்டிருந்த வெந்நீரில் கால் தடுக்கி விழுந்தார். வெந்நீரில் விழுந்த சரஸ்வதிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தோல்கள் கருகி போயின. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் (ஜன.28) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் முல்லைவேந்தன். இவர், அம்பத்தூரில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று (ஜன.28) காலை அரக்கோணத்தில் – சென்ட்ரல் புறநகர் ரயிலில், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறி பயணித்தார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால், படியருகே நின்றிருந்தார். ரயில், திருவாலங்காடை கடந்தபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருத்தணி அடுத்த மணவூர்குப்பம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தீபன் (31). இவர், நேற்று (ஜன.28) காலை வழக்கம்போல் தனது பைக்கில் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, போளிவாக்கம் சத்திரம் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று இவர் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். தீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.