Thiruvallur

News February 4, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பதிவு

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் சைபர் குற்றவாளிகள் வலையிலிருந்து தப்பிக்க மக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய குறித்து மேலேயுள்ள புகைப்படத்தில் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சைபர் குற்றவாளிகளின் வலையில் நீங்கள் சிக்கி விட்டீர்கள் என்றால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News February 4, 2025

திருவள்ளூர் புதிய மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்றார்  

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்கள் இன்று காலை 10:45 மணி அளவில் பதவி ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மக்களுக்கான அடிப்படை வசதிகள் விரைந்து செய்து கொடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News February 4, 2025

முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி

image

திருவாலங்காடு முத்துக்கொண்டாபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 46. முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று காலை, திருவள்ளூரில் உள்ள வங்கியில் பணம் எடுக்க, இரு சக்கர வாகனத்தில் அத்திப்பட்டு ராமலிங்காபுரம் சாலை வழியாக சென்றார். ராமலிங்காபுரம் சென்ற போது எதிரே வந்த, ‘வோக்ஸ்வாகன்’ கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார்.

News February 4, 2025

பெரியபாளையம் அருகே குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

image

பெரியபாளையத்தை அடுத்த, கொசவன் பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவிலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51; நேற்று முன்தினம் மதியம் முதல், இவரை காணவில்லை.  பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்தார். பெரியபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பிரசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 4, 2025

காட்டுப்பள்ளியில் லாரி மோதி ஆசிரியர் பலி

image

கும்மிடிப்பூண்டி அடுத்த, தேர்வாய் சேர்ந்தவர் அரசன்,இவர், மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், தற்காலிக கணினி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, பள்ளி செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் வல்லுார் – காட்டுப்பள்ளி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். எண்ணுார் காமராஜர் துறைமுகம் அருகே சரக்கு ஏற்றி வந்த, லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அரசன் உயிரிழந்தார்.

News February 3, 2025

மெட்ரோ திட்டம் ஓராண்டில் முடிக்கப்படும் 

image

இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் ஐந்தாவது வழித்தடமாக மாதவரம் பால் பண்ணை முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டது. 168.16 கோடி மதிப்பீட்டில் ஜாக்சன் லிமிடெட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி ஓராண்டுக்குள் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார். 

News February 3, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உங்கள் கடவுச்சொல், OTP, PINs CUV விவரங்கள் போன்றவற்றைக் கோரி எந்த வங்கியும் அல்லது அதன் ஊழியர்களும் உங்களை அழைக்கவோ அல்லது மின்னஞ்சல் அனுப்பவோ மாட்டார்கள். அப்படி அழைப்பு வந்தால் உடனடியாக உங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக சென்று புகார் அளிக்கவும் என தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News February 3, 2025

மட்பாண்ட தொழிலாளி வீட்டில் கொள்ளை

image

பொன்னேரி தேரடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். மட்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளியான இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ரூ.10,000 ரொக்கம் மயமாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

News February 3, 2025

பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

image

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பொறியாளர்கள், அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 3, 2025

அரசு பேருந்து மீது டிராக்டர் மோதல்

image

திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி, அரசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு நேற்று (பிப்.2) சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பின்னால் பேனர்கள் ஏற்றி வந்த, டிராக்டர் பேருந்தை முந்தி சென்றது. அப்போது, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில், டிராக்டர் மோதியது. இதில், கண்ணாடி முழுதும் உடைந்ததில் ஒரு பயணிக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.

error: Content is protected !!