Thiruvallur

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>.

News February 16, 2025

கணினி மூலம் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்

image

பூந்தமல்லயில் உள்ள அரசு பார்வைத்திறன் குறைபாடு பள்ளியில், 18 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வுக்கு தயார். பாரம்பரிய முறையில், ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுதியும் தேர்வு நடைபெறும். ஆனந்த் என்ற மாணவர், கணினி மூலம் தனியாக எழுதி தமிழகத்திலேயே முதலாவதாக சாதனை படைத்துள்ளார். இதற்காக, அவர் 2 ஆண்டுகள் கடின பயிற்சி பெற்றார். முன்பு, மத்திய பாடத்திட்டத்தில் 2 மாணவர்கள் இவ்வாறு தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 16, 2025

மக்கள் சாலை மறியல்: MLA பேச்சுவார்த்தை 2/2

image

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாஸ்கரனை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் MLA கே.பி.சங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

News February 16, 2025

கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது: ஒருவர் பலி 1/2

image

மணலி பல்ஜி பாளையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன், சரவணகுமார் பணியாற்றி வந்தனர். நேற்று (பிப்.15) ஆலையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 16, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (பிப்.17) பல்வேறு பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, ஆர்.கே.பேட்டை, அம்மனேரி, கொண்டாபுரம், அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை,, பாண்டரவேடு, மேலப்பூடி, பள்ளிப்பட்டு, கர்லம்பாக்கம், நொச்சிலி, நெடியம், கொள்த்தூர், சாணாகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News February 15, 2025

கணினியில் தேர்வு எழுதும் முதல் பார்வையற்ற மாணவர்

image

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த எம்.ஆனந்த் (17) பிளஸ் 2 படித்து வருகிறார். கம்பியூட்டரில் தமிழ், ஆங்கிலம் டைப்பிங்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக கற்று வரும் ஆனந்த் தமிழகத்தில் முதல் முறையாக மாநில அரசு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை கணினி வழியில் எழுத தேர்வாகி உள்ளார்.

News February 15, 2025

சுகாதார துறையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் பல் மருத்துவர், ‘டேட்டா’ மேலாளர், லேப் உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்களை tiruvallur.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றுகளுடன் பிப்ரவரி 28க்குள் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. 

News February 15, 2025

ஐந்துவித நன்மைகளை வழங்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

image

திருவள்ளூர் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகரில் 40 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கிழக்கு நோக்கியபடி இருக்கும் ஆஞ்சநேய சுவாமியின் முகம், பாவங்களை நீக்கி, தூய்மையான மனதைக் கொடுக்கும். உடலில் உள்ள எல்லா விஷத் தன்மையையும் நீக்கும். வடக்கு நோக்கிய லட்சுமி வராக சுவாமியின் முகம் கிரக தோஷங்களை போக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 15, 2025

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

image

ஊத்துக்கோட்டை,வெங்கல் அருகே உள்ள மேல்செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர், நேற்று முன்தினம் (பிப்.13) தனது விவசாயத்தை நிலத்தை ஏர் உழுது கொண்டு இருந்தார். அப்போது, டிராக்டர் சேற்றில் சிக்கி கொண்டது. டிராக்டரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, டிராக்டர் அவர் மீது கவிழ்ந்தது. இதில் அவர் டிராக்டரின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 15, 2025

வீடுகள் இடிப்பு: கண்ணீருடன் பொதுமக்கள் கைது

image

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்பாக்கத்தில் வனத்துறை இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் வீடுகளை இடிப்பதற்கு நேற்று (பிப்.14) வந்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்கக் கூடாது என போராட்டம் நடத்தியவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகளை இடிக்கப்படும்போது, பொதுமக்கள் கண்ணீருடன் அழைத்து செல்லப்பட்டது கண்கலங்க வைத்தது.

error: Content is protected !!