Thiruvallur

News April 6, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 369 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த பெண்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> ஏப்.23-க்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிறாதீங்க. ஆதரவற்ற பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும்*

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி

image

திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (21). திருத்தணி அரசு கல்லூரியில் பயின்று வந்த இவர், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தனது நண்பர் ராகுலுடன் பைக்கில் திருத்தணி நோக்கி சென்றபோது, குமாரகுப்பம் அருகே எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், பூவரசன் நேற்று (ஏப்ரல் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 5, 2025

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டம் 1.1.1997-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. முதல் கலெக்டராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் (புகைப்படம்) 1.1.1997 அன்று பதவி ஏற்றார். அவரை சேர்த்து தற்போது வரை மாவட்டத்தில் 23 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். இதில், 3 பெண்கள், 20 ஆண்கள். 23 ஆவது கலெக்டராக மு.பிரதாப் 04.02.2025 அன்று பதிவியேற்றார். உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? *நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்

News April 5, 2025

திருவள்ளூரில் பறந்த அதிரடி உத்தரவு

image

திருவள்ளூர் மாவட்டத்தின் கடைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில், மே 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். முதன்மையாக தமிழ், இரண்டாவது ஆங்கிலம், தேவையானால் மூன்றாவது மொழியில் எழுதலாம். மறுப்பவர்களுக்கு 1947-ன் சட்ட விதியின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *கடை வைத்திருக்கும் நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பகிரவும்*

News April 5, 2025

டீம் லீடர் பணிக்கு வேலைவாய்ப்பு

image

திருவள்ளுர் ஆதித்யா பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டீம் லீடர் பணிக்கு வேலை வாய்ப்பு. இவ்வேலைக்கு உயர்கல்வி (12வகுப்பு) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 5, 2025

தரை பாலத்தின் கீழ் கிடந்த ஆண் சடலம்

image

திருவள்ளூர், ஆர்கே பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தை சார்ந்த ராமலிங்கம் மகன் விஜயகாந்த் 34 நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கீழ்மோசூர் செல்லும் சாலையில் இறந்த கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் சடலமாக இருந்தவர் விஜயகாந்த் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2025

திருவள்ளூரில் 2லட்சம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் சின்னம்

image

பூண்டி நீர்த்தேக்கத்தை தாண்டி அமைந்துள்ளது குடியம் கிராமம். இக்கிராமத்தை ஒட்டி இருக்கும் குகைகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர். இப்பகுதியை ஆங்கிலேய தொல்லியல் அறிஞரான ராபர்ட் ப்ருஸ் ஃபுட் முதன்முதலில் கண்டறிந்தார். அதுமட்டுமின்றி இவ்விடம் பழைய கற்கால மனிதர்கள் கை கோடாரி செய்யும் பகுதியாக இருந்தது. அதற்கு ஏற்ப இவ்விடத்தில் அதிகமான அளவில் மிக பழமையான கை கோடாரிகளை காணலாம். ஷேர் பண்ணுங்க

News April 4, 2025

திருவள்ளூர் மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக உதவி எண்- 18005997626 , 9840327626, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை- 044 – 27666746, பேரிடர் கால உதவி- 044-27664177, 9444317862, 1077, காவல் கட்டுப்பாட்டு அறை- 100, விபத்து உதவி எண்- 108, தீ தடுப்பு- 101, விபத்து அவசர வாகன உதவி- 102, குழந்தைகள் பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு- 1091, BSNL ஹெல்ப் லைன்- 1500. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்

News April 4, 2025

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம். 9499055663, 8778452515, 9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE TO FRIENDS

error: Content is protected !!