Thiruvallur

News February 23, 2025

அனுமதியின்றி தென்னங்கன்று விற்றால் நடவடிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில், உரிய அனுமதியின்றி தென்னை, காய்கறி விதை மற்றும் கன்றுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார். உரிமம் இல்லாமல் விற்பனை செய்வதோ, ரசீது வழங்காதோ, பதிவு மேற்கொள்ளாதோ செய்யப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். புதிய உரிமம் பெற seedcertification.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News February 23, 2025

கடைகளில் உணவுத் தரம் குறித்து கள ஆய்வு

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பிரதாப் தலைமையில் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. கடைகளில் அடிக்கடி நடத்த உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறை இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 23, 2025

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து

image

கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் நாளை( பிப்.24) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரயில்கள் இன்று காலை 9.50 மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

கடைகளில் போதைப்பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும்

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தடுப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற இதில், போதைப் பொருட்கள் விற்பனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும், விதிமுறைகள் மீறிய கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது. 

News February 22, 2025

26 நகை கடைகளின் மீது நடவடிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் எம்.வெங்கடாசலபதி தலைமையில் திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. 26 நகைக்கடைகளில் தராசுகள் மற்றும் எடைகளுக்கு முத்திரையிடப்படாததும், சான்று வழங்கப்படாததும் கண்டறியப்பட்டது. இதன் பேரில் கடை உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் பணி புரிய அறிய வாய்ப்பு!

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 21, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் அரசு மூலம் வழங்கப்படுகிறது. தனிநபர், சங்கங்கள், நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் பெயரில் உதவி செய்வதாக கூறி பணம் வசூலிக்கக் கூடாது. பணத்தை இழந்து ஏமாற்றத்திற்குள்ளானால், ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 9499933496 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

மாடியில் இருந்து குதித்து டிரைவர் தற்கொலை

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து திருவள்ளூரைச் சேர்ந்த டிரைவர் குமார்(48) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கழுத்தில் கட்டி இருந்ததால் கடந்த 14ஆம் தேதி முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நோய் கூடுமை தாங்காமல் விபரீத முடிவு எடுத்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 21, 2025

முன்கோபத்தால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியைச் சார்ந்த தம்பதி விநாயகம் (72) – தனலட்சுமி (60).இவர்கள் தனது மகன் மணிகண்டன் என்பவரிடம் வசித்து வருகின்றனர். மகன் இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்தபோது தனது தாயார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது பற்றி திருமுல்லைவாயில் பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் கணவன் ஆத்திரத்தில் மனைவியை கொன்றது தெரியவந்தது.

error: Content is protected !!