India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழ்வுநிலை மண்டலத்தால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (அக்.7) திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 26252453 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு& ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. உறவினர்களுக்கு பகிரவும்.

திருத்தணி வட்டம் தெக்களூர் அருகே நேற்று இரவு கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூன்று பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க அக்.20ஆம் தேதியே கடைசி நாள். செம வாய்ப்பு.., உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

அம்பத்தூர்- மதுரவாயல் நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் பதிவு எண் இல்லாத பைக்கில் ரேஸ் ஓட்டி அட்டுழியத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். திருவள்ளூர் மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.