India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தண்டலச்சேரி கிராமத்தில் வசித்தவர் ரமேஷ்பாபு, 57. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் சிலாப்பில் இருந்த பொருளை எடுப்பதற்காக, கட்டில் மீது ஏறினார்.அப்போது, தவறி விழுந்தவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவு இழந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்,இதுகுறித்து போலீசார் விசாரணை.
கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரம் கிராமத்தில் வசித்தவர் பாரதி, 37 தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷர்மிளா, 35 இருவரும், நேற்று முன்தினம் இரவு,செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.புதுவாயல் அருகே, பின்னால் வந்த வேன் இவர்கள் மீது மோதியது. படுகாயமடைந்த பாரதி, பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
திருவள்ளூர் பூண்டியில் அமைந்துள்ளது தான் அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில். இங்கு சிவன் கிழக்கே பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருள்கிறார். இங்கு வந்து வேண்டினால் திருமணம் தடை, கண் பார்வை குறைபாடு, குடும்ப பிரச்சனை நீங்கும் என்பது ஐதீகம். நேர்த்திக்கடனாக சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபடலாம். சிவராத்திரி, ஐப்பசி, திருக்கார்த்திகை போன்றவை இங்கு சிறப்பு. சேர் செய்யுங்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் அண்மையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 4 பேர் பலியாகினர். இந்நிலையில், விபத்தில் காயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <
பெண் உள்ளாடையுடன் ஓடி பெண்களுக்கு பாலியல் கொடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் விக்ரமனின் வீடியோ இணையத்தில் கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அது சினிமா ஷூட்டிங் என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்தார். படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்ரமனின் மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலம் விக்ரமன், பெண்கள் அணியும் உள்ளாடையுடன் ஓடி பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணையத்தில் வீடியோ கசிந்தது. இதுகுறித்து அவர் கூறிய விளக்கத்தில், “சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை அடிப்படை ஆதாரமின்றி, உண்மைத்தன்மையை ஆராயாமல் ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப்பற்றி அவதூறு பரப்புவதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த வீரானத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (52), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகள் அர்ச்சனா கடந்தாண்டு 9ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு சரியாக செல்லாததால், தந்தை கண்டித்துள்ளார். மனவேதனை அடைந்த அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீராத மனஉளைச்சலில் இருந்து வந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் (மார்.8) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் 12-ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் நகரில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை தொடர்ந்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பங்கேற்றார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 4,351 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.19 கோடி 18.22 லட்சம் தொகைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களில், சமரசம் மூலம் இந்த தீர்வுகள் எடுக்கப்பட்டன. பொதுமக்களின் நீதி நிலுவை குறைப்பில் இதனால் முக்கிய முன்னேற்றம் கண்டது குறிப்பிடத்தக்க்கது.
Sorry, no posts matched your criteria.