Thiruvallur

News July 5, 2025

திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

image

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 5 ஏக்கரில் இந்த திட்டம் 2023 ஜூலை தொடங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கத்துக்கு, வசதியாக அடிப்படை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.

News July 5, 2025

திருவள்ளூரில் திறக்கப்பட்டது ஆம்ஸ்ட்ராங் சிலை

image

திருவள்ளூரில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் சிலை இன்று (ஜூன் 5) திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், கோரிக்கை மனு சமர்பித்து, அனுமதி வழங்கியதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்துவைத்தார் தலைமை நீதிபதியின் தாயார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5,2024, சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News July 5, 2025

பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை அனுப்பிவைப்பு

image

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு ஆவடி வரையிலான வழித்தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளின் கோரிக்கை ஏற்று திட்டத்தை பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரையில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தை ஆய்வு செய்த தமிழக அரசு ரூ9,928.33 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்ளப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது

News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

image

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்

News July 5, 2025

திருவள்ளூர் தொழிலார்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இந்த <>லிங்க் <<>>மூலம் அப்ளை செய்து இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். ஷேர் பண்ணுங்க. <<16949914>>தொடர்ச்சி<<>>

News July 5, 2025

திருவள்ளூரில் இன்றைக்கு கரண்ட் கட்

image

திருவள்ளூரில் இன்று மின் வெட்டு காலை 9 மணி முதல் 2 மணி வரை இருளிப்பட்டு துணை மின் நிலைய பரமரிப்பு பணி காரணமாக ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், பெரியபாளையம் சாலை, ஸ்ரீநகர், இருளிப்பட்டு, சாய்கிருபா நகர்,MGR நகர், சத்திரம், சித்தி விநாயகர் பண்ணை, ஜகநாதபுரம், ஆமூர், மாலிவாக்கம், குதிரைப்பள்ளம், நெடுவரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்று கரண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

செங்குன்றம் அலமாதி 16வயது சிறுமியை 6ஆண்டுக்கு மேல் சொந்த சித்தப்பா வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்த புகாரை செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உத்தாசனப்படுத்தியுள்ளார். சொந்த சித்தப்பா ஜலாலுதீன் பாலியல் வன்கொடுமையால் தற்போது 4மாத கர்ப்பிணியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் GHதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

News July 4, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News July 4, 2025

கர்ப்பிணியை தாக்கிய காவலர்

image

கனகம்மாசத்திரம் சிவாஜி என்பவர் மதுமிதாவிற்கு போனில் தகாத வார்த்தையால் குறுஞ்செய்தி அனுப்பியதாக மதுமிதா, 2தோழிகளுடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளனர். அப்போது காவலர் ராமர் மூவரை தாக்கியுள்ளார். காவலர் தாக்கிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. TNமனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சம்பவம் குறித்து 6வாரங்களில் விரிவான அறிக்கை தர திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு உத்தரவு.

News July 4, 2025

திருவள்ளூர் உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

image

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 04) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.30, உருளை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.35, அவரைக்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

error: Content is protected !!