Thiruvallur

News July 6, 2025

திருவள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை (044-27660250) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962579>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

திருவள்ளூரில் இன்று இலவச கண் சோதனை முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனதில் அ.இ.அ.தி.மு.க சார்பில் (இன்று) கண் சோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில் திருவள்ளூர் மாவட்ட வடக்கு கழக செயலாளர் மற்றும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம், பி.பலராமன் முகாமை துவக்கிவைத்தார். இந்த முகாம் காலை 9:00மணி முதல் 2:00மணி வரை, பொன்னேரி சின்னகாவனம் வள்ளலார் கோயில் அருகில் நடைபெறுகிறது. இதில் பயன்பெற அதிமுகவினர் அழைக்கின்றனர்.

News July 6, 2025

திருவள்ளூரில் வட்ட ரயில் இயக்க கோரிக்கை

image

திருவள்ளூர்: காஞ்சிபுரம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வட்ட பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் கோரிக்கை மனு வைத்துள்ளார். சென்ட்ரல் வழி தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர் மார்க்கமாக இயங்கி வந்த வட்ட பாதை ரயிலை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ரயில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

News July 6, 2025

திருவள்ளூர் இறைச்சி மார்க்கெட் விலை நிலவரம்

image

திருவள்ளூர் மார்கெட்டில் இன்று இறைச்சி விலை நிலவரம் (கிலோவில்): எலும்பில்லாத நாட்டு கோழி கிலோ ரூ.450, கோழிக்கறி கிலோ ரூ.240, ஆட்டு இறைச்சி கிலோ ரூபாய். 850, ஆட்டுத்தலை ரூபாய் 300, நாலு ஆட்டுக்கால்கள் ரூபாய் 400, மூளை ரூ.120, மண்ணீரல் ரூபாய் 200. பொன்னேரியில் சிக்கன் விலை கிலோ ரூபாய் 200 -க்கு விற்கப்படுகிறது.

News July 6, 2025

திருவள்ளூர் மீன் மார்க்கெட் விலை நிலவரம்

image

திருவள்ளூர் மின் நிலவரம் (கிலோவில்) : வஞ்சிரம் மீன் ரூ.900-1000, பண்ண மீன் கிலோ ரூ.300-350, பாறை மீன் கிலோ ரூபாய்.200-300, இறால் (சிறியது) கிலோ ரூபாய்.200, (பெரியது) ரூபாய்.300-500, நண்டு கிலோ ரூபாய்.200-300, பெரிய நண்டு ரூ.400-800, சங்கரா மீன் கிலோ ரூ.400-450, பாறை மீன் கிலோ ரூ. 200-250, மத்தி மீன் கிலோ ரூ.60, ஊடான் மீன் ரூ.300, ஏரி மடவைர ரூ.200, கட்லா ரூ.200-250, ஏரிக்கண்டை ரூ.200 க்கு விற்பனை

News July 6, 2025

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் ஒடிசா மாநிலத்தில் கொலை

image

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிஷா மாநிலம் சென்றுள்ளார். அவரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்

News July 5, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News July 5, 2025

பிரசித்திபெற்ற பைரவர் கோயில்

image

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆகாஸ பைரவர் ஆலையம் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பே அஷ்ட பைரவர்கள் எட்டு பைரவர்கள் உள்ளனர். ஒரே இடத்தில் இந்த 8 பைரவர்களை தரிசனம் செய்யும் அற்புத தலமாக உள்ளது. மேலும், தொலைந்த பொருளை மீட்க, செல்வம் பெருக இங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் திருமணத்தடை நீங்க ஞாயிறு அன்று ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News July 5, 2025

ஆரம்பாக்கம் பகுதி நெடுஞ்சாலை சாலையில் ஆக்கிரமிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பஜார் பகுதி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள, இணைப்பு சாலையில் சிறு வியாபாரிகள் காய்கறிகள் பழங்கள் பூ மாலைகள் என வியாபாரம் செய்ய பந்தல் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இணைப்பு சாலை வழியாக அரசு பேருந்துகள் செல்ல முடியாத நிலை, தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்கிறது. எனவே வியாபாரிகளுக்கு மாற்றிடம் தந்த போக்குவரத்து துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுப்பு.

News July 5, 2025

திருவள்ளூரில் புதிய கட்சி துவங்கிய ஆர்ம்ஸ்டராங்க் மனைவி

image

திருவள்ளூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 5) தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி எனும் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிற கொடி எழுதுகோலை துதிக்கையில் ஏந்திய யானை சின்னத்துடன் உதிக்கும் வெள்ளை நிற சூரியன் உடன், புதிய கட்சி உதயமானது.

error: Content is protected !!