India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு செம்பாசிபள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (26). இவர் நேற்று பெரியபாளையத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு விடியற்காலை வீட்டிற்கு பைக்கில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி அடுத்த பிரளயம்பாக்கம் சாலை கல்வெட்டில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழவேற்காடு, கோட்டைக்குப்பத்தில் 82 பேரின் மீன் வலைகள் நேற்று முன் தினம் இரவு மர்மமான முறையில் எரிந்துள்ள நிலையில் அப்பகுதிக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று எரிந்த மீன்வலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரியிடம் இதுகுறித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.
பழவேற்காடு: கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட மீன்பிடி வலைகள் நேற்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இந்த விபத்தில் மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தசரத நகரில் மரங்களின் காவலன் மற்றும் சிரிப்பு நடிகர் விவேக் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நேதாஜி சோசியல் ஆர்க், மற்றும் மர வங்கி சார்பில் இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நேதாஜி சோசியல் ஆர்க் மர வங்கி தலைவர் ஸ்ரீதர் பாபு மற்றும் உடன் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்
பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக யாக கலச பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க கலசநீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், (ஏப்ரல் 20) இன்று மறு வெளியீடு செய்யப்பட்டு திருவள்ளூர் ராக்கி திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுககாக தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி. மற்றும் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 விதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல் மின் நிலைய 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட மெய்யூரில் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை செய்திராத ஊராட்சியை கண்டித்து பொதுமக்கள் அரசுப்பேருந்தை வழிமறித்து வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தினால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் தொலைபேசி மூலம்பேசி சமரசம் செய்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் பொன்னேரி பகுதியில் நேற்று காலை 7 மணி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 311 பூத்களில் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி திருவள்ளூர் வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் வைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் பொன்னேரி பகுதியில் நேற்று காலை 7 மணி தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 311 பூத்களில் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி திருவள்ளூர் வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் வைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
Sorry, no posts matched your criteria.