India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இதயதுல்லா(30). இவர், தடாவில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(ஜன்.1) தனது பைக்கில் கடைக்கு சென்றுகொண்டிருந்த அவர் மீது லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது லாரி ஏறி, இறங்கியதால் உடல் நசுங்கி கொடூரமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)

திருவள்ளூர்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்க்கலாம். பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது தவறுகள் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய உதவும் என ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் நிக்சன்(48). கார் டிரைவரான இவருக்கு கிருஷ்ண மாலா(39) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் இருந்தனர். கடந்த 2023ஆம் தேனி மாவட்டம், கம்பம் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவரது மகள் பேமினா(14) சுருளி அருவியில் விழுந்து உயிரிழந்தார். இதனால், மனமுடைந்த நிக்சன், நேற்று(ஜன.1) தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆவடி காவல் ஆணையாளராக காவல்துறை கூடுதல் இயக்குனர்
பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்று, தமிழ்நாடு காவல்துறையின் தென் மண்டல காவல் துறை தலைவராக பணிபுரிந்து வந்த பிரேம் ஆனந்த் சின்கா, காவல்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஆவடி காவல் ஆணையரகத்தின் நான்காவது புதிய காவல் ஆணையாளராக நேற்று(ஜன.1) பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பொன்னேரி அடுத்த தேவனாம்பட்டு அகரம் பகுதியைச் சேர்ந்த அருணா(27). கீரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். தாய் திட்டியதால் அவர் 2 தினங்களுக்கு முன்பு இரவு விஷம் அருந்தியுள்ளார். மயக்கிய அவரை, பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று (ஜன.01) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா வாலிபர் (டிச.27) மீது கஞ்சா போதையில் 4 பேர் கொடூரமாக தாக்கியதில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டகாக கூறப்பட்டுள்ளது.

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா வாலிபர் (டிச.27) மீது கஞ்சா போதையில் 4 பேர் கொடூரமாக தாக்கியதில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டகாக கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.