Thiruvallur

News October 9, 2025

திருவள்ளூர் மக்களே! COPTA Act எதற்குன்னு தெரியுமா?

image

இந்தியாவில் COTPA Act, 2003 என்ற சட்டத்தின்படி அரசு அலுவலகம், ஹோட்டல், பஸ் ஸ்டாப், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தியேட்டர், பூங்கா, பொதுசாலையில் புகைப்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சிகரெட் விற்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இனி பொது இடங்களில் புகைப்பிடிப்பவரை கண்டால் உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேசன் &1 800-11-2356 -ல் புகாரளியுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்

News October 9, 2025

திருவள்ளூருக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை!

image

திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (அக்.9) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!

News October 9, 2025

திருவள்ளூர்: G Pay / PhonePe / Paytm பயனாளர்கள் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News October 9, 2025

திருவள்ளூர்: கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்

image

திருமுல்லைவாயில், அராபத் ஏரியில் 2வது நாளாக நேற்றும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால், ஏற்பட்டுள்ள பீதியால், திருவள்ளூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் நீரின் மாதிரியை, நேற்று ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். ஏரியின் அருகில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன நிலையில் கழிவுநீர் நேரடியாக ஏரியில் கலந்து ஏரி மாசடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது வரையில் 2 டன் மீன்களை அகற்றி உள்ளனர்.

News October 9, 2025

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் (அக்.10) அன்று காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார்-ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

News October 8, 2025

திருவள்ளூர்: பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.10.2025) பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பொதுமக்களிடமிருந்து குறைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து இத்தகைய கூட்டங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

News October 8, 2025

திருவள்ளூர்: ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு நடைபெறும் காவல் ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பொதுமக்கள் அவசரநேரங்களில் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.

News October 8, 2025

திருவள்ளூர்: 50% ஆபர்! மக்களே உஷார்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் ஆன்லைன் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும், ரூ.1.2 லட்சம் சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள்<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News October 8, 2025

திருவள்ளூர்: உங்க ஆதார் கார்டை வேறுயாராவது யூஸ் பண்றாங்களா?

image

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!