India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூந்தமல்லி அருகே ராமாபுரம் பிரதான சாலையில் நடந்துசென்ற வாலிபரிடம் மர்ம நபர் கத்தியை காட்டி பணத்தை பறித்துச் சென்றார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ராமாபுரம், ஆண்டவன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (44) என்பவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் அகோபில மடம் வசந்த மண்டபத்தில் ஐந்தாம் நாளாக நேற்று எழுந்தருளினார். திருமஞ்சனத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நுங்கு தோரணங்கள் வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்தது கோடை வசந்த விழாவின் சிறப்பு அம்சம் ஆகும். குதிரை வாகனத்தில் உற்சவர் பெருமான் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.20) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஆவடி அருகே காட்டூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் சுரேஷ் (50), முரளி கிருஷ்ணன் (43) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று நிறுவனத்தில் உள்ள கிரேன்களை பழுது பார்க்கும் போது ஏர் சிலிண்டர் வெடித்து சிதறியதில் சுரேஷ், முரளி கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் ஆவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் மெய்யழகன் (55). இவர், திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வந்தார். திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த அவரது மனைவி லட்சுமி, அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம்,
பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்துள்ளார். அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சாய்குமார் (27), பார்த்தசாரதி (20) ஆகியோர் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் இருவரது உடல்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ கழிவுகளை தீ வைத்து அழிக்கும் இந்த நிறுவனத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வானுயர புகைமூட்டம் எழுந்தது. சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன/
ஆவடி அருகே கொரட்டூர் பகுதியில் இப்ராஹிம் (76) என்பவருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதனை போலி ஆவணம் தயாரித்து அம்பத்தூர், பானு நகரைச் சேர்ந்த நில புரோக்கர் விஜயகுமார் (47) என்பவர் உள்ளிட்டோர் வேறு நபருக்கு விற்றுள்ளனர். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு போலீஸார் சிலரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள், கோடை வசந்த விழாவை ஒட்டி, அகோபில மடம் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த விழாவில், தினசரி வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் வீரராகவ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோடையில் பக்தர்களுக்கு இனிமையாக காட்சி தரும் விதமாக வீரராகவ பெருமாள், வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.
ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (65). பிப்ரவரி மாதம் இவரை திருவள்ளூர் அருகே பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்பவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார். அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணனை, திருமுல்லைவாயல் போலீசார் காவல் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து, மீண்டும் நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.