Thiruvallur

News May 24, 2024

திருவள்ளூர் அருகே பௌர்ணமி பூஜை: திரண்ட பக்தர்கள்

image

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பொன்னியம்மன் கோவிலில் நேற்று பௌர்ணமி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பௌர்ணமி தீபாரதனையுடன் அம்மனுக்கு சிறப்பு ஆலாபனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 23, 2024

திருத்தணி கோயிலில் டிஆர்டிஒ செயலாளர் சாமி தரிசனம்

image

திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் இந்த திருத்தலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை டி ஆர் டி ஒ செயலாளர் சதீஷ் ரெட்டி இன்று நண்பகல் முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் உற்சவர் சண்முகர் ,முருகர் ,மூலவர் முருகர் வள்ளி தெய்வானை சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 23, 2024

ஆவடி மாணவர்கள் சாதனை.!

image

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி கோவர்த்தனகிரி, லட்சுமி நகரை சார்ந்த மாணவன் எஸ்.எல்.நிதிஷ்குமார், மாணவி எஸ்.சஹானா ஆகியோர் மலேசியாவில் உள்ள LINCOLN பல்கலைகழகத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்றனர். இதையடுத்து ஆவடி எம்எல்ஏ நாசர் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News May 23, 2024

காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கல்யாணம்

image

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின்போது மழை பெய்து குளிர்வித்ததால், பக்தர்களிடம் பரவசத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

News May 23, 2024

திருவள்ளூர்: சிறுமிகளிடம் அத்துமீறிய வாலிபர் கைது

image

பூந்தமல்லி அருகே மதுரவாயல் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்த செல்லும் சிறுமிகளுக்கு பைக்கில் வரும் மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (22) என்பவரை நேற்று கைது செய்தனர்.

News May 23, 2024

இந்து அமைப்பு தலைவர் கொலை: காங். பிரமுகர் உள்பட 6 பேர் கைது

image

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பின் மாநிலத்தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). நேற்று மாலை இவர் பூந்தமல்லியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியைச் சார்ந்த காங்கிரஸ் பிரமுகர் கோபால் (61), கிருஷ்ணகுமார் (34), சம்பத்குமார் (45), லோகநாதன் (38), சந்தோஷ்குமார் (32), ராஜேஷ் (32) உள்பட 6 பேரை இன்று காலை கைது செய்தனர்.

News May 23, 2024

திருத்தணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்

image

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். இவருடன் திமுக மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி உடன் வந்திருந்தார். அதனை தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கூடியது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஐஸ்வர்யா பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார்.

News May 23, 2024

திருவள்ளூரில் பரிசளிப்பு விழா

image

திருவள்ளூர் அஞ்சலக சப்டிவிஷனில் கடந்த நிதியாண்டில் 2023-24 நிதியாண்டில் சிறப்பாக பணி ஆற்றியவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். திருவள்ளூர் உட்கோட்ட கண்காணிப்பாளர் திருவள்ளூர் சப் டிவிஷனல் எஸ்.கௌஷிக் தலைமை தாங்கினார். மற்ற சப் டிவிஷனல் அதிகாரிகளும் பலர் உடன் இருந்தனர்.

News May 22, 2024

சென்னை புறநகர் பகுதியில் மின்சார ரயில் சேவை பாதிப்பு

image

ஆவடி அருகில் இந்து கல்லூரி- பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 8 மணி அளவில் தண்டவாளத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை- அரக்கோணம் இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 45 நிமிடங்கள் போராடி கோளாறை சரி செய்தனர். இதன் பிறகு இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை தொடங்கியது.

News May 22, 2024

பூந்தமல்லி: இந்து அமைப்பின் மாநிலத்தலைவர் வெட்டிக் கொலை

image

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கழகத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). இவர் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் டீக்கடைக்குள் புகுந்து ராஜாஜியை சரமாரி வெட்டிக் கொலை செய்தனர். புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!