India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல அலுவலகத்தில் நேற்று (மார்ச் 18) போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது. பின்னர் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். ஜாபர் சாதிக்கின் மேலாளர் இம்ரான், கணக்காளர் ஷெரிப்பிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஈரோடைச் சேர்ந்த அய்யாவு, (வயது 79) போக்சோ வழக்கில் கைதாகி கடந்த மாதம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அய்யாவுக்கு திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 9.25 முதல் 11.40 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் 6 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கரகம்பாக்கம் கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்தி சென்ற 4 பேரை அப்பகுதியினர் மடக்கி பிடித்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர்கள் அம்பத்தூரை சேர்ந்த தீபக்குமார், கௌதம், சசிகுமார் மற்றும் ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களை தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் கே.ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திருவள்ளூரில் மீண்டும் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க, பொதுமக்களுக்காக 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை 14.03.2024 முதல் இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-27660641, 044-27660642, 044-27660643, 044-27660644 மற்றும் 1800 425 8515 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் தங்கள் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செல்வி தம்பதியரின் மகன் சிவமணி தொடர்ந்து 10 மணி நேரம் கிணற்றில் மிதந்து மச்சாசன யோகா செய்த உலக சாதனை நிகழ்த்தும்
நிகழ்வில் பங்கேற்றுள்ளார். பொதுமக்கள் உற்சாகமாக ஆதரவளித்து அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். மருத்துவர் உதவி மற்றும் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு நடத்தப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மீது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிப்பர் லாரி ஓட்டுநர் சுந்தர் என்பவரின் இரு கால்களும் நசுங்கின. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஊராட்சி உப்ரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (36). இவர் கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் தேதி நண்பர்களுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீட்டிற்கு இதுவரை திரும்பி வராததால் பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆவடி அடுத்த பாலவேடு, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகேயுள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.