Thiruvallur

News March 25, 2024

திருவள்ளூர்: பணத்துடன் சிக்கிய திமுக நிர்வாகிகள்

image

பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த மீஞ்சூர் திமுக ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் பூமிநாதன் ஆகியோரிடமிருந்து ₹500 நோட்டுகள் இருந்த திமுக தலைவரின் படம் பிரிண்ட் செய்யப்பட்ட கிஃப்ட் கவர்கள் மற்றும் ₹50000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாகே சங்கத் பல்வந்த் வசம் ஒப்படைக்கப்பட்டது.

News March 25, 2024

திருவள்ளூர்: தங்கையின் கணவரை வெட்டிய சகோதரி

image

செங்குன்றம் விஜயநல்லூரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மேனகா கணவரை பிரிந்து கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள துராபள்ளம் கிராமத்தில் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவியை பார்க்க துராபள்ளம் வந்த நந்தகுமார் மதுபோதையில் மேனகாவை வெட்ட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மேனகாவின் அக்கா ஷோபனா கத்தியை பிடுங்கி நந்தகுமாரை சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2024

திருவள்ளூரில் பாஜக வேட்பாளர் மனு தாக்கல்

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.வி. பாலகணபதி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து

image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே, வரும் 25, 26, 27 ஆகிய நாட்களில் காலை 9:25 மணி முதல் 11:40 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் மூன்று நாட்களுக்கு, ஏழு மின்சார ரயில்களின் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 24, 2024

திருவள்ளூர்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

News March 23, 2024

திருவள்ளூரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டவர். மிகவும் துடிப்பாக செயல்படக்கூடியவர் என்ற நற்பெயர் பெற்றுள்ளார்.

News March 23, 2024

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பும், திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இக்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் முன்னாள் மேல் சபை எம்பியுமான அசோக் சித்தார்த் கலந்துகொண்டு பட்டியலை வெளியிட்டு திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் மகிழ்மதியை அறிமுகம் செய்தனர்.

News March 23, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் ’12 டி’ ஐ பூர்த்தி செய்து அந்தந்த தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் மார்ச் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

News March 23, 2024

திருவள்ளூர் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், ரமணா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

error: Content is protected !!