Thiruvallur

News April 2, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் வீணாக்கப்பட்ட ரூ.42 கோடி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளம் அமைக்க ரூ.42,60,60000 ஒதுக்கப்பட்டது. தற்போது, மாவட்டம் முழுவதும் பணி முடிந்த நிலையில், 95% ஊராட்சிகளில் பணி அறைகுறையாகவே நடந்துள்ளது. குளம் வெட்ட சொன்னால் குழந்தைகள் விளையாட பள்ளம் வெட்டியது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ரூ.42 கோடி வீணாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

News April 1, 2025

குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பானை வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.

News April 1, 2025

திருவள்ளூர்: தடை நீக்கும் வரமூர்த்திஸ்வரர் கோயில்

image

திருவள்ளூர், சோழவரம் அருகே உள்ள எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் வரமூர்த்திஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆதலால் இங்குள்ள இறைவனை வணங்கினால் திருமணம் உள்ளிட்ட அனைத்து தடைகளும் நீங்கும். இங்கே வரும் பக்தர்கள் ஊற்றெடுக்கும் கங்கை நீரை அருந்தி, கிருஷண அரச மரத்தை சுற்றி வந்த பின் சிவனை வணங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். ஷேர் பண்ணுங்க

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

பெண் போல பேசி நூதன மோசடி

image

அரக்கோணத்தை சேர்ந்தவர் சத்தியநாதன், இவரிடம், 2 மாதங்களாக திருவாலங்காட்டை சேர்ந்த தினேஷ் என்பவர் பெண் போல மொபைல் போனில் பேசி பழகியுள்ளார். இதை உண்மை என நம்பிய வாலிபர் அவரை சந்திக்க வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த தினேஷ் மற்றும் 2 வாலிபர்கள் சத்தியநாதன் தாக்கி அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்துள்ளனர். இதுக்குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2025

குடும்பத்தை ஒற்றுமையாக்கும் திருத்தலம்

image

திருவள்ளூர், திருவாலங்காடில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வர்ர கோயில். முற்க்காலத்தில் இறைவன் சுயம்வுவாக தோன்றி நடனம் ஆடிய தலம் என்பதால் வடாரண்யேஸ்வரர் என பெயர் பெற்றது. இத்தலம் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. மேலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் பண்ணுங்க<<>>

News March 31, 2025

தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

image

திருவள்ளூர், திருவேர்க்காட்டில் வீடு புகுந்து மொபைல், மடிக்கணிகள் திருடப்பட்டுன. இதுகுறித்து காவல்துறைக்கு வந்த புகாரின் பெயரில் மர்ம நபர்களை தேடிய நிலையில் இன்று ராமச்சந்திரன், ஜனார்த்தனம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த பொழுது அவர்களிடம் இருந்து 26 மொபைல் போன் மற்றும் 3 மடிக்கணிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவர் மீதும் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!