Thiruvallur

News March 20, 2025

திருவள்ளூரில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் 8,10,12th மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கல்வி தகுதி ஏற்ப பணியிடங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. இம்முகாம் பொன்னேரி அரசு கலை கல்லூரியில் மார்ச் 22 நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளுங்கள், ஷேர் பண்ணுங்கள்.

News March 20, 2025

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உயிருடன் மீட்பு

image

மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் கோவில் அருகே, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்து, கன்னிகாபுரம் காட்டுப்பகுதியில் விட்டனர். இதுபோன்று அடிக்கடி நடப்பதால் வனப்பகுதிக்கருகே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

News March 20, 2025

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம்

image

திருத்தணி-திருவள்ளூர் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லட்சுமாபுரம் அருகே மின்கம்பம் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் தொழிலாளர் பிரதீப் மால், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2025

பைக்கில் புடவை சிக்கி பெண் உயிரிழப்பு

image

திருவாலங்காடு அருகே, ஜெகதீசன் மனைவி அருணாவுடன் மகளை சந்திக்க இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார். பார்த்துவிட்டு ஊருக்கு  திரும்பி வரும்பொழுது, அருணாவின் புடவை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி, வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 19, 2025

தீராத நோய்களைத் தீர்க்கும் வீரராகவப் பெருமாள்

image

திருவள்ளூர் நகருக்கே பெருமை சேர்க்கும் விதமாக, புகழ் கூட்டும் விதத்தில் எழுந்தருளியிருக்கிறார் வீரராகவ பெருமாள். சிவபெருமான் இத்தலத்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் 9 கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

ஒன்றரை வயது குழந்தையை கடித்த வெறிநாய்

image

திருத்தணி அருகே வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை வெறி நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு மேல் சிகிச்சைக்காக ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கூலி வேலை செய்து வரும் அக்குழந்தையின் தந்தை பழனி செய்வதறியாமல் தவித்து வருகிறார்.

News March 19, 2025

8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த <>விண்ணப்பத்தை<<>> பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும்.

News March 19, 2025

புழல் ஜெயில் கைதி திடீர் மரணம்

image

செங்கல்பட்டு போந்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிகம், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றர். 2022ஆம் ஆண்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9-ந் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

News March 19, 2025

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

image

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் சரவணன், டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மதியம் மத்துார் பகுதியில் கொரியர் கொடுக்க பேருந்தில் சென்றார். மத்துார் ரயில்வே கேட் அருகே இறங்கி நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு,மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். 

News March 18, 2025

திருவள்ளூரில் வெளிநாட்டு பல்கலை கிளை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரில் லண்டன் டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளை அமைப்பது தொடர்பாக இன்று தொழிற்துறையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அறிவுசார் நகரத்தை அமைப்பதற்காக கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், வெங்கல் ஆகிய கிராமங்களில் 870 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தப்பட உள்ளன.

error: Content is protected !!