Thiruvallur

News April 27, 2024

திருவள்ளூர் அருகே ஒருவர் அடித்து கொலை

image

திருவள்ளூர் அருகே கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (70), அதே பகுதியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு வந்த செல்வம் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது உறவினர்கள் இன்று காலையில் சென்று பார்த்தபோது அவர் தலை பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கீழச்சேரி அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து மப்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 27, 2024

பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

image

பொன்னேரியில்
அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது
ஐந்தாம் நாள் உற்சவமாக நாச்சியார் இன்று ஊஞ்சல் ஊர்வலமும் இரவு கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்து அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வு இன்று இரவு நடைபெறுகிறது பிரம்மோற்சவ சந்திப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

News April 27, 2024

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News April 27, 2024

திருவள்ளூர் வெப்பநிலை விவரம்

image

திருவள்ளூர், திருத்தணி நேற்று (ஏப்.26) 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 26, 2024

திருவள்ளூர்: கஞ்சா போதையில் 12 பேருக்கு வெட்டு..!

image

திருமுல்லைவாயில் அடுத்த கணபதி நகரில், வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்து.இவர் நேற்றிரவு கஞ்சா போதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டியும்,பட்டா கத்தியால் 12 பேரை வெட்டினர்.இதுகுறித்த புகாரின்பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான விஷ்ணு மற்றும் அபினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முத்துவை தேடி வருகின்றனர்.

News April 26, 2024

அறுவடை பணிகள் தீவிரம்

image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி (ம) அதை சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா அறுவடைக்கு பின்னர் கோடையில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், விதைப்பு செய்யப்பட்ட தர்ப்பூசணி, 60 – 65 நாட்கள் ஆன நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பழங்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்தாலும் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News April 26, 2024

திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில் சிறப்பு!

image

திருவள்ளூர், தேவி மீனாட்சிநகரில் அமைந்துள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில். இங்கு 2004ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர்சுவாமி சிலை உள்ளது. இந்த இடம் புராண காலத்தில் ருத்ர வனம் என அழைக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரத்தில் விமானமும், 15 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்சிநேயர் தோற்றம் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 26, 2024

ஸ்ரீ ராமர் சீதைக்கு திருக்கல்யாண வைபவம்

image

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று மாலை காப்புக்கட்டுதல் வைபோவம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீராமபெருமாளுக்கும் அன்னை சீதைக்கும் ராஜ அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

News April 25, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு 

image

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூர், பெருமாள்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் கலெக்டர் பிரபுசங்கர் இன்று (25/04/2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 25, 2024

ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

image

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்துவதாக திருத்தணி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின்படி தனிப்படை போலீசார் நேற்று திருத்தணி ரயில் நிலைய பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஓம்பிரகாஷ் மற்றும் வாசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!