India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூந்தமல்லி அடுத்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலிலில், ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, நேற்றிரவு (ஆகஸ்ட் 3) கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம் குடும்பத்தினர், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின், மூர்த்தி, அப்துல் ரஹீம், சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 4) காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவதாகவும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்ததையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. உங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, கிரிக்கெட் விளையாடியது, சினிமாவிற்கு சென்றது என பல சுவாரஸ்யமாக விஷயங்களை செய்திருப்போம். சினிமாவை மிஞ்சும் அளவுக்குகூட சில சேட்டைகளை செய்திருப்போம். அந்த வகையில், உங்கள் நண்பனுடனான நினைவுகளை கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க. ‘HAPPY FRIENDSHIP DAY’
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருவள்ளூரில் உள்ள 6,25,864 அட்டை தாரர்களில் ஜூலை மாத பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான சீசிங் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, வேளச்சேரியில் பார் நடத்தும் ஆனந்தனை மிரட்டி பணம் கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் நேற்று (ஆகஸ்ட் 3) மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 3, 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், திருவள்ளூர் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், விபத்துகள், கோரிக்கைகள், அரசியல் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். இதில், ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
திருவள்ளூரில் நாளை (ஆகஸ்ட் 2) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை திருவள்ளூர் நகரில் உள்ள ஜே.என்.சாலை, ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை, பூங்கா நகர், புங்கத்தூர், போளிவாக்கம், மணவாளநகர், ஏகாட்டூர், வெங்கத்தூர், கீழ்நல்லாத்தூர், மேல்நல்லாத்தூர், பெரியகுப்பம், நுங்கம்பாக்கம், ஒண்டிகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சுற்றுலா தொழில்முனைவோா் விருதுக்கு திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் வரும் ஆக. 20க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண பங்குதாரா், விமான பங்குதாரா், உணவகங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஏற்பாட்டாளா்கள் இணையதளத்தின் மூலமாகவும், மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.