India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி அடுத்த இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர் அசின் மும்தாஜ். இவரது மகன் பாஷா தனது தாயிடம், வியாபாரம் செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது; தனக்கு கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மும்தாஜ் தன்னால் கடன் வாங்கி தர முடியாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த பாஷா நேற்று உருட்டு கட்டையால் மும்தாஜ் தலையில் தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த மும்தாஜ் மயங்கி விழுந்தார். பாஷாவை போலீசார் தேடிவருகின்றனர்.
திருத்தணி முருகன் மலைக் கோவிலில் தற்போது பெய்த மழையால் வெள்ளம் முறைப்படி வழியாகச் சென்றது. மேலும் மலை படிகட்டுகள் மற்றும் அங்குள்ள பாவாடை விநாயகர் கோவில் வளாகத்தில் மண் படிந்திருந்தது. பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் நேற்று காலை கோயில் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் படிகளில் படிந்துள்ள மண்ணை அகற்றினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. 194 தேர்வு மையங்களில் 58,127 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். 12,740 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டம் முழுவதும் தேர்வு எழுத சென்று வர 13 வழித்தடங்களில் 240 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 7.3 செ.மீ மழை திருவள்ளூரில் 3.5 செ.மீ மழை ஊத்துக்கோட்டை 4.2 செ.மீ, தாமரைப்பாக்கம் 1.8 செ.மீ, ஆர்கே பேட்டை 2.2 செ.மீ, செங்குன்றம் 1 செ.மீ, பொன்னேரி 1.4 செ.மீ பள்ளிப்பட்டு 1 செ.மீ, சோழவரம் 2.1செ.மீ, கும்முடிபூண்டி 2செ.மீ, ஆவடி 5மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வருவாய் தீர்வாய அலுவலர் தீபா தலைமையில் நடைபெற்றது. செருக்கனுார் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சுமார் 48 பேர் பட்டா உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். உடன் ஆர் டி ஓ நேர்முக உதவியாளர் ராமன், வட்டாட்சியர் மதியழகன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 1433 – ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவளங்காடு பகுதியில் 10 செ.மீட்டரும், திருவள்ளூர் பகுதியில் 7 செ.மீட்டரும், தாமரைப்பாக்கம் பகுதியில் 6 செ.மீட்டரும், ஊத்துக்கோட்டை, R.K.பேட்டை, ரெட் கில்ஸ் பகுதியில் 2 செ.மீட்டரும், ஆவடி, சோழவரம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இன்று 6.7.2024 (இரவு7 மணி வரை) திருவள்ளூர் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூரில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.