India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி வேலை செய்து வந்தார். நேற்றிரவு, பணியின்போது அவரது துப்பட்டா மற்றும் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியது. இதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் டி.எஸ்.பி. கந்தன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர், வி.எம்.நகரை சேர்ந்த தலைமையாசிரியர் கிருஷ்ணமாராஜ் (65) கடந்த 17ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். பின்னர் நேற்று (ஆக.19) கிருஷ்ணமாராஜ் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு போட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சி வேடங்கிநல்லூரில் ரூ. 33 கோடியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் கலந்தாய்வு மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (20/08/24) நடைபெற்ற இந்த கலந்தாய்வில், துறை சார்ந்த அதிகாரிகள் பணிகள் குறித்த முழு விவரங்களை தெளிவாக விளக்கினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்போ செந்திலின் கூட்டாளியான ரவுடி மொட்டை கிருஷ்ணனிடம் மோனிஷா பேசியுள்ளதால், மொட்டை கணேசனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தகட்டமாக, இயக்குநர் நெல்சனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வரும் இன்று, நாளை மற்றும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் பங்கேறு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,479 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 84 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,390 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 107 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 305 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.20) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் 2014 ஆம் ஆண்டு புதிய வீட்டிற்கான மின் இணைப்புக்காக, அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணிப்பித்தார். அங்கு உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சுகுமார் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள திருவள்ளூர் கிளையில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா நேற்று தொடங்கியது. இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி, தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு 9962948002, 9444396845, 9445023485, 9551670581 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பனையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் சாரகத்தில் அதிகாரி நாகபுஷணம், ஊத்துக்கோட்டை சாரகத்தில் அதிகாரி முரளிதாஸ், திருத்தணி சாரகத்தில் அதிகாரி ரவிச்சந்திரன், கும்மிடிப்பூண்டி சாரகத்தில் அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் இன்று(19/08/2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.