Thiruvallur

News June 23, 2024

பணி நியமண ஆணை வழங்கிய கலெக்டர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று (22.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவனம் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 22 பயனாளிகளுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கினார். உடன் துறை சார்ந்த அலுவலர்களும் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் இருந்தனர்.

News June 22, 2024

பணி நியமண ஆணை வழங்கிய கலெக்டர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (22.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவனம் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 22 பயனாளிகளுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கினார். உடன் துறை சார்ந்த அலுவலர்களும் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் இருந்தனர்.

News June 22, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

News June 22, 2024

பொன்னேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

image

பொன்னேரி வட்டம் முல்லைவாயில் மற்றும் புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து உள்ளதை வட்டாட்சியர் உத்தரவின் பேரில் அகற்றும் பணி நடைபெற்றது. 80 லட்சம் மதிப்புள்ள இடத்தை வேளி போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக் குறுவட்ட ஆய்வாளர் பி. பெருமாள், புதுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் தடுப்புகளை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றினர்.

News June 22, 2024

அரசு பேருந்து விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு.. 5 பேர் படுகாயம் 

image

சென்னை கோயம்பேட்டில் இருந்து சத்தியவேடுக்கு இன்று அதிகாலை அரசு பேருந்து புறப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த சோழவரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே வந்த வாகனம் மீது மோதிவிடக்கூடாது என பிரேக் போட்டத்தில் நிலை தடுமாறிய பேருந்து அருகில் இருந்து பெட்ரோல் பங்க் சுவற்றில் இடித்து விபத்துக்குள்ளானது. இதில் சுதா என்பவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

News June 21, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 21) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News June 21, 2024

நள்ளிரவில் திருடர்கள் கைவரிசை

image

திருத்தணி, கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி கோவிந்தன் (58). இவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் வழியாக புகுந்து, வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 27 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 21, 2024

ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி

image

தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்து திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி வரும் 29 ஆம் தேதி சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதன்படி ஓட்டம், குதித்தல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News June 21, 2024

திருவள்ளூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை கூறி தீர்வு காணலாம் என ஆட்சியர் பிரபுசங்கர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 20) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!