Thiruvallur

News October 13, 2025

திருவள்ளூரில் 305 பேர் அப்சென்ட்!

image

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 14 மையங்களில், காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்த தேர்விற்கு, 4,454 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில், 4,149 பேர் தேர்வு எழுதினர். 305 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவற்றில் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கும் பணியை, கல்வித் துறையினர் மேற்கொண்டனர்.

News October 13, 2025

திருத்தணி முருகன் கோயிலில் அவலம்

image

திருத்தணி முருகன் கோயிலில், முடி காணிக்கை மண்டபத்தில், ஆறு மாதமாக சுடு தண்ணீர் வழங்கும், ‘வாட்டர் ஹீட்டர்’ இயந்திரம் பழுதாகி உள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடிகாணிக்கை செலுத்துகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு முதல் முறையாக முடி காணிக்கையும் செலுத்துகின்றனர். இந்நிலையில், குளிக்க வசதி இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

News October 13, 2025

ஆவடி: வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு

image

ஆவடி மாநகராட்சியில் வரி வசூல் மையங்கள் மக்கள் வசதிக்காக பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வரி செலுத்தும் கடைசி தேதி அக்.31 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிரதான அலுவலகம், பருத்திப்பட்டு பூங்கா, சோழபேடு, திருமுல்லைவாயில், காமராஜ் நகர், பட்டாபிராம் உள்ளிட்ட வரி வசூல் மையங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News October 13, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.12) அன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். மேலும், 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2025

திருவள்ளூரில் வெள்ளப்பெருக்கு! போக்குவரத்து பாதிப்பு

image

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையால், பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து சில தினங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை வெள்ளநீரால் சேதமடைந்தது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பேரம்பாக்கம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

News October 12, 2025

திருவள்ளூர்: காதலை சேர்த்து வைக்க உதவி கேட்ட சிறுமி சீரழிப்பு

image

திருத்தணியை சார்ந்த 16வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். சிறுமி, தேவராஜ்(24) என்பவரிடம் தங்களது காதலை சேர்த்து வைக்க உதவி கூறினார். தேவராஜ் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தனியாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் பேரில் தேவாவை போலீசார் கைது செய்தனர்.

News October 12, 2025

திருவள்ளூர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா!

image

திருவள்ளூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க!

News October 12, 2025

திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருவள்ளூர் DSP-044-27667070, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373001951 . *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News October 12, 2025

திருவள்ளூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில் <<>>LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News October 12, 2025

திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

திருவள்ளூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!