Thiruvallur

News June 5, 2024

திருவள்ளூரில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

image

திருத்தணி அருகே சின்னம்மாபேட்டையில் உள்ள மாவு மில்லில் இருந்து சத்தம் அதிகமாக வருவதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்டோர் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் இன்று காலை ஏழுமலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

News June 5, 2024

திருவள்ளூர் தொகுதி தேர்தல் முடிவு!

image

2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் – 7,96,956 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி – 2,24,801 வாக்குகள்
*தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி – 2,23,904 வாக்குகள்
*நாதக வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் – 1,20,838 வாக்குகள்

News June 5, 2024

திருவள்ளூர்: பாஜக, தேமுதிக, நாதக டெபாசிட் இழப்பு

image

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாலகணபதி, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News June 5, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றம் 6.3 சென்டிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 17.55 மில்லி மீட்டர், பள்ளிப்பட்டு 2.5 சென்டிமீட்டர், சோழவரம் 2.7 சென்டிமீட்டர், பொன்னேரி 5.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 6.3 சென்டிமீட்டர், பூவிருந்தவல்லி 1.7 சென்டிமீட்டர், திருவள்ளூர் 2.3 சென்டிமீட்டர், ஊத்துக்கோட்டை 3.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News June 5, 2024

திருவள்ளூர்: காங். வேட்பாளர் தமிழகத்தில் முதலிடம்

image

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாலகணபதி, தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் உள்ளிட்டோர் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

காங் வேட்பாளர் 5.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

image

திருவள்ளூர் தொகுதியில் இறுதி சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்றார். 2-வது இடத்தில் பாஜக வேட்பாளர் பாலகணபதி 2,24,801 வாக்குகளும், 3-வது இடத்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904 வாக்குகளும், 4-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் 1,20,838 வாக்குகளும் பெற்றுள்ளனர். சசிகாந்த் செந்தில் 5,70,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

News June 4, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 4) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News June 4, 2024

திருவள்ளூர் காங் வேட்பாளர் வெற்றி அறிவிப்பு

image

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,94,608 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக பாஜக வேட்பாளர் பாலகணபதி 2,24,042 வாக்கு பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,550 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் வெற்றி சான்றிதழை இன்று இரவு வழங்கினார்.

News June 4, 2024

ஆவடி: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு.

image

ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தில் இன்று (ஜூன்-4) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச் சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!