Thiruvallur

News July 4, 2024

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

News July 3, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

திருவள்ளூர் கலெக்டருக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஆட்சியர் த.பிரபுசங்கர் தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

News July 1, 2024

உபா சட்டத்தில் கைதான இருவருக்கு நீதிமன்ற காவல்

image

தடை செய்யப்பட்ட அமைப்பில் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரில், தஞ்சாவூரில் தேசிய புலனாய்வு முகமை(NIA) நடத்திய சோதனையில் முஜிபூர் ரஹ்மான், அப்துல் ரகுமான் ஆகியோரை உபா சட்டத்தில் நேற்று(ஜூன் 20) கைது செய்தனர். 2 பேரையும் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News July 1, 2024

திருவள்ளூர்: 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 1, 2024

திருவள்ளூரில் பெய்த மழை அளவு விவரம்

image

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஜூலை 1) காலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டியில் 1.6 செ.மீ, பொன்னேரி 1.5 செ.மீ, ஆவடி 1 செ.மீ, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டையில் தலா 3 மி.மீ, சோழவரத்தில் 2 மி.மீட்டரும், செங்குன்றத்தில் 1 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 5.47 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News June 29, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 29) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News June 29, 2024

திருவள்ளூரில் காலை உணவுத் திட்டம்: ஆய்வு கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜூன் 28) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடங்குவதை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

News June 28, 2024

இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 28) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News June 28, 2024

திருவள்ளூரில் நேரடி கொள்முதல் நிலையம்: அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதான விவாதத்துக்கு பதில் அளிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!