Thiruvallur

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 17, 2024

திருவள்ளூரில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஜூலை 17) இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.

News July 17, 2024

சூரப்பட்டு அருகே துப்பாக்கி முனையில் ரவுடி கைது

image

திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் போலீசார் இன்று(ஜூலை 17) கைது செய்துள்ளனர். 5 கொலை வழக்குகள் உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர் 6 மாதமாக தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து, சரித்திர பதிவேடு ரவுடியான சேதுபதியை சிறப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில்<<>> வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <>HRCE <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

News July 17, 2024

ஜாபர் சாதிக் நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

image

சட்ட விரோதமாக பணபரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக் திகார் சிலையிலிருந்து நேற்று சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு அமர்த்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவேற்காடு, சக்தி நகரிலுள்ள அவருடைய நண்பர் ஜோசப் வீட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அமலாக்க துறையினர் நேற்று (ஜூலை 16) காலை முதல் இரவு வரை பல மணி நேரம் சோதனை நடத்தி வருகின்றனர்.

News July 17, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: திருவள்ளூரில் நீதிபதி உத்தரவு

image

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைதான 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையில் 5 நாட்கள் காவல் முடிந்தவர்களுக்கு பூந்தமல்லி தனி சிறையில் வைத்து, எழும்பூர் நீதிபதி தயாளன் நேற்று (ஜூலை 16) நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 11ம் தேதி வரை 10 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

News July 17, 2024

தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

image

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அப்பள்ளிக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும் நகராட்சி அதிகாரிகள் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க உத்தரவு பிறப்பித்தனர்.

News July 16, 2024

மகளை கொன்றுவிட்டு கார்பெண்டர் தற்கொலை

image

பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதி மோகன்(32) – பரிமளா(28). உறவினருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் பரிமளா அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகன், தனது மகள் நட்சத்திரா(5) என்பவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு இன்று காலை(ஜூலை 16) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!