Thiruvallur

News July 20, 2024

ஆஸ்ட்ராங் கொலை: திருவள்ளூர் எம்பி பரபரப்பு பேட்டி

image

இணைந்தெழு தமிழ்நாடு இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரை நிகழ்த்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ஆருத்ரா மோசடியை தீர விசாரித்தால் ஆம்ஸ்ட்ராங் கொலை மட்டுமல்லாமல் பல சம்பவங்களை தடுக்கப்படலாம் என்றார்.

News July 19, 2024

சி.ஆர்.பி.எப் தேர்வில் ஆள்மாறாட்டம் – இளைஞர் கைது

image

ஆவடி, சி.ஆர்.பி.எப்-பில் துப்புரவு பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கரண் சிங் ரத்தோர் (21) என்பவர் பங்கேற்றார். அப்போது எழுத்து தேர்வில், இவருக்கு பதிலாக வேறு ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. புகார் பெற்று ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து கரண் சிங் ரத்தோரை இன்று (ஜூலை.19) கைது செய்தனர்.

News July 19, 2024

1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

பொன்னேரி, காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசா மேற்குவங்கம் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலின்படி புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை கூண்டு தமிழகத்தில் காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 19, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (19-07-2024) இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

திருவள்ளூரில் அறிவுசார் நகரத்திற்கான பணிகள் தொடக்கம்

image

திருவள்ளூரில் ரூ.200 கோடி செலவில் கல்வி மையங்கள், திறன்மிகு மையங்கள், அறிவுசார் தொழிலகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு அறிவுசார் நகர்’ அமைப்பதற்கான நிலம் எடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல்நிலை அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பான ஆட்சேபனை இருந்தால் மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

News July 19, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,682 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில்1,502 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 127 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 315 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 19) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளைய மின்தடை அறிவிப்பு

image

மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகள், அயப்பாக்கம், ஊத்துக்கோட்டை பகுதிகள், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தொழிற்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

பூந்தமல்லியில் 2 டன் குட்கா பறிமுதல்; 3 பேர் கைது

image

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில், இன்று(ஜூலை 18) லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அதில் 2 டன் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், வட மாநிலத்தைச் சேர்ந்த ராஜலிங்கம், லிங்கதுரை, தமிழ் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

News July 18, 2024

திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை

image

திருவள்ளூரில் இன்று(ஜூலை 18) இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இன்று மாலை ஆவடி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், 10 மணி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!