Thiruvallur

News September 11, 2024

திருவலாங்காடு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

திருவாலங்காடு மணவூர் அரசு உயர்நிலை பள்ளி திருவள்ளூர் சேர்ந்த பாஸ்கர்(52) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 3 மாணவிகளிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் புகார் செய்தனர் விசாரணைக்கு பின் ஆசிரியர் பாஸ்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News September 11, 2024

மீஞ்சூரில் இரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எம்பிக்கு கோரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் -காட்டூர் நெடுஞ்சாலையில் உள்ள இரயில்வே கடவு பாதையில் நாளொன்றுக்கு 10,000 மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன.இங்கு கேட் முடப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.இந்நிலையில் இங்கு சுரங்கப்பாதை அமைக்க திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

News September 11, 2024

புழல் கஞ்சா வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை

image

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த ஆண்டு தண்டையார்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (43) என்பவரிடம் இருந்து 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போதைப் பொருட்களுக்கான முதன்மை அமர்வு நீதிமன்றம், 12 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கியது. கட்ட தவறினால் ரூ.1.20,000 அபராதமும் நீதிமன்றம் விதித்தது.

News September 11, 2024

திருவள்ளூரில் செப்.14ஆம் தேதி சிறப்பு முகாம்

image

திருவள்ளூரில் உள்ள 9 வட்டங்களில் செப்.14ஆம் தேதி ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்த முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், மக்கள், தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம், புகைப்படம் பதிவு செய்தல் உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருக்கும் ரேஷன் கார்டு காரர்கள் அனைத்து உறுப்பினர்களும் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும்.

News September 11, 2024

திருவள்ளூர் எம்.பி. இரங்கல்

image

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில், வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். வணிகர்களின் உரிமைகளை பாதுகாக்க வணிகர் அமைப்பை தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். அவரது குடும்பத்தினருக்கும், வணிகப்பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

News September 11, 2024

திருவள்ளூரில் மின்சார ரயில்கள் இன்றும் ரத்து

image

பராமரிப்பு காரணமாக திருவள்ளூர்-சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும், ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இரவு 9:35 மணிக்கு திருவள்ளூர் – கடற்கரை மின்சார ரயில், இரவு 7:50 மணிக்கு கடற்கரை – திருவள்ளூர் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், கும்மிடிபூண்டி முதல் கடற்கரை வரை செல்லக்கூடிய இரவு 9:55 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News September 10, 2024

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்ட அளவில் வரும் 13ஆம் தேதி அந்தந்த பகுதி வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் எனவே விவசாயிகள் தங்கள் குறைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

News September 10, 2024

முதலமைச்சர் கோப்பை போட்டி தொடக்கம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில், இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் , அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News September 10, 2024

திருவள்ளூர் அருகே லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

image

திருவள்ளூர் போளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மதுக்கர் இவர் மணவாள நகரில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவர் மும்முனை மின்சாரம் பெறுவதற்காக பெரியகுப்பம் மின்வாரிய உதவி பொறியாளர் கஜேந்திரனைத் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் ரூ.2,500 லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்த புகாரின் பேரில் அவரை நேற்று கைது செய்தனர்.

News September 10, 2024

திருத்தணி தீ விபத்து குறித்து விசாரிக்க கோரிக்கை

image

திருத்தணி முருகப்பா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், தாய் என உயிரிழந்தனர். கணவர் பிரேம்குமார் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பிரேம்குமாரின் தம்பி பிரபாகரன் என்பவர் திருத்தணி டி.எஸ்.பி கந்தனிடம் புகார் செய்துள்ளார். தீ விபத்து குறித்து விசாரிக்க மனு அளித்தார்.

error: Content is protected !!