Thiruvallur

News July 22, 2024

முந்திரி காட்டில் இளைஞர் கொலை: 6 பேர் கைது

image

திருவள்ளூர் அடுத்த முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (19). இவர் கடந்த 10ஆம் தேதி மாயமானார். இதையடுத்து, போலீசார் விசாரணையில் கொப்பூர் முந்திரி காட்டில் இவரை கொன்று புதைத்திருப்பதும், அவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கிருஷ்ணன், நாகரத்தினம், அஜய், ரவி, சாரதி, தமிழ் ஒளி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.

News July 22, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குவாரி விரோதம்தான் காரணம்?

image

மணல் குவாரி முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரில் செயல்பட்டு வந்த மணல் குவாரிக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்த தடை உத்தரவின் பின்புலத்தில், ஆம்ஸ்ட்ராங் இருந்ததாகக் கூறப்படுகிறது. மணல் குவாரி தடையால் ஏற்பட்ட பகையும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 22, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை

image

ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணாம்பட்டினம் துறைமுக பகுதியில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மனைவிக்கு பணம் அனுப்புவதை கண்டுபிடித்து வங்கி கணக்கை முடக்கிய போலீசார், குன்றத்தூரில் வசிக்கும் குடும்பத்தினருடன் சீசிங் ராஜா தொடர்பு கொள்கிறாரா? என விசாரித்து வருகின்றனர்.

News July 21, 2024

திருவள்ளூரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: தீவிர தேடுதல் வேட்டை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, கொசஸ்தலை ஆற்றில் இன்று 2ஆவது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொலை வழக்கில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரனுக்கும் தொடர்பு இருந்த நிலையில், போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்று கொசஸ்தலை ஆற்றில் 6 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று 2ஆவது நாளாக ஆயுதங்கள் சிக்குமா? என போலீசார் தேடி வருகின்றனர்.

News July 21, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்தடுத்து சிக்கும் பிரமுகர்கள்

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பு இருப்பதாக, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ள ஹரிஹரன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 14 பேர் ஏற்கெனவே கைதான நிலையில், பாஜக, தமாக, திமுக உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்போ செந்தில் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைதவனர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 20, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் சரகத்தில் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், ஊத்துக்கோட்டை சரகத்தில் ஆய்வாளர் பாரதி, திருத்தணி சரகத்தில் ஆய்வாளர் கோவிந்தன், கும்மிடிப்பூண்டி சரகத்தில் ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோர் இன்று (ஜூலை-20) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கோலை வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ள ஹரிதரன் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய 5 செல்போன்களை வெங்கத்தூர் கூவம் ஆற்றில் இருந்து ஸ்கூபா வீரர்கள் மூலம் போலீசார் மீட்டனர்.

News July 20, 2024

திருவள்ளூரில் அறிவுசார் நகரம்: ஆட்சேபனை தெரிவிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, எல்லாபுரம் ஒன்றியம் மேல்மாளிகைபட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல்நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் மாநெல்லூர் சிப்காட் தொழில் பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கலாம், ஆட்சேபனை மனு குறித்து ஆகஸ்ட் 22ம் தேதி விசாரணை நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!