India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூரில் பாமக செயற்குழு உறுப்பினர் குபேந்திரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று மணலி புதூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாரியில் வந்த குபேந்திரனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குபேந்திரன் போக்குவரத்து போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததுபோல், போலீசார் தங்களையும் என்கவுண்டர் செய்ய உள்ளதாக ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றாவளிகள் நீதிமன்றத்தில் கதறியுள்ளனர். கொலையாளிகள் என கைது செய்யப்பட்டுள்ள அருள், பொன்னை பாலு, ராமு ஆகியோர் நீதிபதி முன்பு கூறியுள்ளனர். இதையடுத்து, குற்றவாளிகளை துன்புறுத்தக்கூடாது என்றும், எப்படி அழைத்து வந்தீர்களோ, அதேபோல் பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆம்ஸ்ட்ராங்க படுகொலை குறித்து பிரபல ரவுடியான மின்ட் ரமேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாஜக பிரமுகராக இருந்த அவருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என அவரது வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் 3 வழக்கறிஞர்களிடம் விசாரித்து வரும் தனிப்படை போலீசார், சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் நெருங்கியதாகக் கூறப்படுகிறது.
திருவள்ளூர் சரகத்தில் உதவி ஆய்வாளர் பரமசிவம், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் பூபாலன், திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் சுரேஷ், கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் பாலு ஆகியோர் இன்று (ஜூலை-22) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையராக கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, ஆவடி மாநகராட்சின் புதிய ஆணையர் கந்தசாமி விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதேபோல் தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் 28 நபர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (CCSE-II (Group IIA SERVICES) மூலம் நேரடியாக நியமன உதவியாளராக, மாவட்ட வருவாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வான 28 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி அறிவுரை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.22) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் ஆட்சியர் த.பிரபுசங்கர், பொதுமக்களிடம் இருந்து 417 கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி நூற்றாண்டையொட்டி தி.மு.க இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை22) நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் ஒழித்தல் தொடர்பாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று(ஜூலை22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.36 லட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.