India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அளவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருவாலங்காடு, பெரியக்களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாசாமி மகன் சாந்தகுமார்(17). இவர் அரக்கோணம் அடுத்த புளியமங்களத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் முதலாமாண்டு பயின்று வந்தார். நேற்று ஐ.டி.ஐ.,க்கு சென்று விட்டு மாலை அரக்கோணத்தில் இருந்து புறநகர் ரயில் வாயிலாக வீடு திரும்பும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சீதாராம் யெச்சூரி மறைவிற்கு திருவள்ளூர் எம்பி தனது சமூக வலைதள பக்கத்தில் மாணவர் சங்கம் மூலம், இடதுசாரி தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்தத் துயரமான சூழலில் இடதுசாரி தோழர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவு தெரிவித்து உள்ளார்.
திருவள்ளூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரவீன் (25). திருத்தணி ஜோதி நகரை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (24). இவரக்ள் இருவரும் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி சீனிவாச பெருமாள் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் பிரபு சங்கர் நேற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். புழல் சிறைக்கு உத்தரவு நகலை வழங்கினார்.
பள்ளிப்பட்டு அருகே உள்ளது குமாரராஜா பேட்டை. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தமிழரசு மகன் குப்பன், ரத்தின மகன் பிரகாஷ், ஐயப்பன் மகன் அரவிந்தன் இந்த மூவர் வீட்டிலும் இன்று சென்னையிலிருந்து வந்த அமலாக்கத்துறையினர் காலை முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எது சம்பந்தமான விசாரணை என்பது இதுவரை வெளியாகவில்லை.
நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் கடந்த 2002 ஆண்டு சுற்றுலா சென்றபோது சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது மனைவி,2003ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.2005யில் அரசு விரைவு பேருந்து நிர்வாகம் சார்பில்,3.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க என நீதிமன்றம் உத்தரவிட்டது.இழப்பீட்டு தொகையை நேற்று முன்தினம் வரைவழங்காததால் அரசு விரைவு பேருந்து நேற்று ஜப்தி செய்யப்பட்டது.
சென்னை தரமணியில் உள்ள அரசு எம்ஜிஆர் திரைப்பப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார், பின்னர் பத்திரிக்கையாளர்களிடம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் திரைப்பட நகரம் உருவாக்கப்பட உளள்து. அமைசர் உதயநிதியும் அதற்கான இடத்தை பார்வையிட்டுள்ளார். விரைவில் பணி தொடங்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று நண்பர்கள் வீடுகளில் கொடுப்பதற்காக பலகாரங்களை எடுத்துக்கொண்டு சிறுமி வந்துள்ளார். அருகில் உள்ள வீட்டில் வளர்த்து வரும் நாய் திடீரென சிறுமி மீது பாய்ந்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாயிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தை சார்ந்தவர் ரமேஷ். இவர் ஏல சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி ஊரை விட்டு தப்பி சென்றதால் பாதிக்கப்பட்டவர்கள் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.