Thiruvallur

News September 18, 2024

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 18, 2024

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்

image

பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் வசித்து வந்த திமுக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் இன்று உடல்நல குறைவால் காலமானார். கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கா.சுந்தரம். கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், சுந்தரத்திற்கு ‘அண்ணா’ விருது வழங்கப்பட்டது. திமுக துணை பொதுச்செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.

News September 18, 2024

திருவள்ளூர் அருகே 200 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர் அதில் குட்கா பாக்கெட்டுகள் 200 கிலோ கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தததை அடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்த ராமச்சந்திரன் இன்பராஜ் திரவியக்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

News September 17, 2024

திருவள்ளூர் அருகே 3 பேர் கைது

image

திருவள்ளூர் தாலுகா போலீசார் திருவள்ளூர் அடுத்த பட்டறை பெரம்பத்தூர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, கூலிப் ஆகியன மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து இன்பராஜ், திரவியகுமார், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

News September 17, 2024

திருவள்ளூர் அருகே விபத்தில் மரணம்; 30 பேர் காயம்

image

நேற்று சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் எண் 104 என்ற மாநகரப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ஆரோக்கியம் ராஜேஷ் என்பவர் பேருந்து ஓட்டிச் சென்றார்.திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் மாதவரத்தை சேர்ந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பயணிகள் முப்பது பேருக்கு காயம் இதுகுறித்து போலீசார் விசாரணை.

News September 17, 2024

திருவள்ளூர் முதல்வர் கோப்பையில் குழப்பம்; போராட்டம்

image

திருவள்ளூர் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி 16,17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட விளையாட்டு துறை அறிவித்திருந்தது. இதற்காக நேற்று போட்டியில் பங்கேற்க 250-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.நேற்று நடைபெறவிருந்த போட்டி நேற்றுமுன்தினம் முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விளையாட்டு வீரர்கள் போராட்டம் நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

News September 16, 2024

திருவள்ளூர் அருகே 500 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

image

பூந்தமல்லி அருகே பழஞ்சூர் கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். அரசு நிலங்கள் இது போல் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது குறித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

News September 16, 2024

திருவள்ளூர் அருகே கொலை; மூவர் கைது

image

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ். லாரி டிரைவர். இவர் கடந்த 13 ஆம் தேதி செங்குன்றம் பகுதிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்தார்.சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதுவது போல் வந்ததாக கருதி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.விஏஓ கொடுத்த புகாரின் பேரில் கும்மானூர் சேர்ந்த தியாகராஜ், புது சத்திரம் கோகுல பாண்டியன்,மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகிய மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News September 16, 2024

திருவள்ளூர் அருகே 6 கி.மீட்டருக்கு கொடி,பேனர்கள்

image

அ.தி.மு.க.,வினர் திருமழிசை – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரண்வாயல்குப்பம் பகுதியில் இருந்து மணவாள நகர் வரை 6 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் விளம்பர பேனர்கள், மீடியனில் கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர். பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 16, 2024

ஜப்பான் பெண்ணை திருமணம் செய்த திருவள்ளூர் மாப்பிள்ளை

image

திருவள்ளூர் பகுதியை சார்ந்த ராஜேஷ் பொறியியல் பட்டம் பெற்று ஜப்பான் நாட்டில் பணி செய்து வந்தபோது அங்கு உடன் பணி செய்து வந்த மியூகி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இன்று திருவள்ளூரில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இதில் மணப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜப்பானிலிருந்து வருகை தந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!