India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கருணாநிதி நூற்றாண்டையொட்டி தி.மு.க இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை22) நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் ஒழித்தல் தொடர்பாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று(ஜூலை22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.36 லட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகை விழாவானது வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நாளில் அறுபடை வீடுகளில் மிக விமரிசையாக வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (19). இவர் கடந்த 10ஆம் தேதி மாயமானார். இதையடுத்து, போலீசார் விசாரணையில் கொப்பூர் முந்திரி காட்டில் இவரை கொன்று புதைத்திருப்பதும், அவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கிருஷ்ணன், நாகரத்தினம், அஜய், ரவி, சாரதி, தமிழ் ஒளி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.
மணல் குவாரி முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரில் செயல்பட்டு வந்த மணல் குவாரிக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்த தடை உத்தரவின் பின்புலத்தில், ஆம்ஸ்ட்ராங் இருந்ததாகக் கூறப்படுகிறது. மணல் குவாரி தடையால் ஏற்பட்ட பகையும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணாம்பட்டினம் துறைமுக பகுதியில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மனைவிக்கு பணம் அனுப்புவதை கண்டுபிடித்து வங்கி கணக்கை முடக்கிய போலீசார், குன்றத்தூரில் வசிக்கும் குடும்பத்தினருடன் சீசிங் ராஜா தொடர்பு கொள்கிறாரா? என விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, கொசஸ்தலை ஆற்றில் இன்று 2ஆவது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொலை வழக்கில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரனுக்கும் தொடர்பு இருந்த நிலையில், போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்று கொசஸ்தலை ஆற்றில் 6 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று 2ஆவது நாளாக ஆயுதங்கள் சிக்குமா? என போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.