India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் போலிவாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை அருகே மேல் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (19), பவுன்ராஜ் (24) ஆகிய 2 பேரும் கத்தி மற்றும் ராடு (இரும்பு கம்பி) உடன் கொள்ளையடிக்க காத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஆவடி பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாலங்காடு 11.3 செ.மீ. செங்குன்றம் 7.5 செ.மீ. மழை பதிவானது. ஊத்துக்கோட்டை பகுதியில் 6.7 செ.மீ. மழை பதிவானது. திருவள்ளூர் மற்றும் சோழவரத்தில் 5செ.மீ. , மழை பதிவானது.
திருவள்ளூரில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று வரை குட்கா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,538 குட்கா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடியே 45 லட்சத்து 38 ஆயிரத்து 9 7 ஆகும். இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தகவல்.
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ராமதாஸ் என்பவரது பணப் பலன்களை விடுவிக்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கணக்கு பிரிவு அலுவலர் ஷேக் அகமது என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர். ரசாயனம் கலந்த பணத்தை கொடுத்த போது கையும் களமாக சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 38 வழக்குகள் பதிவு செய்து 38 பேர் கைது செய்யப்பட்டு 3,245 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் மற்றும் மதுபான வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர் படுத்தி 2 பிரிவுகளின் கீழ் நன்னடத்தை பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 2 டன் எடையுள்ள 17 செம்மரக்கடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது செம்மரக்கட்டைகள் சிக்கின. ஆந்திராவில் இருந்து சரக்கு ஆட்டோவில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை-திருவள்ளூர் மின்சார ரயில் பயணம் 10 நிமிடங்கள் அதிகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே அறிவிப்பில், ஆவடி-அம்பத்தூர் இடையே மெட்ரோ குடிநீர் வாரியத்தின் குழாய் பொருத்தும் பணிகள் நடைபெறுவதால், ரயில்கள் 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது, ரயில்கள் 90 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இனி 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும்.
Sorry, no posts matched your criteria.