India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் சரகத்தில் ஆய்வாளர் ரவிக்குமார், ஊத்துக்கோட்டை சரகத்தில் ஆய்வாளர் எழுமலை, திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் சுகந்தி, கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் இன்று(ஜூலை26) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் ஆடி கருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நாளை தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆடிக்கிருத்திகையை ஒட்டி 5 நாட்கள் திருத்தணி நகராட்சி பகுதியில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்படும். சாலையோர கடைகளில் வரி வசூல் செய்யப்பட மாட்டாது என திருத்தணி நகராட்சி அறிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,603 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 116 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,499 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 134 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 310 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 26) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே வழக்கறிஞர் சிவா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரது வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேர் கைதான நிலையில், ஒருவர் எங்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஜீலை 25 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில் ஆவடியில் இன்று (ஜூலை25) தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போகிறது என்றும், மின் கட்டணம் உயர்வதோடு மின்தடையும் ஏற்படுகிறது என்றார். மேலும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
திருவள்ளூர் மாவட்ட எஸ் பி சீனிவாச பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு சம்பந்தப்பட்ட 2 சக்கர வாகனங்கள் 23) 4 சக்கர வாகனங்கள் 3 என மொத்தம் 26 வாகனங்கள் ஜூலை 30ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் எஸ் பி அலுவலகத்தில் ஆயுதப்படை மைதானத்தின் அருகே ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான முழு விபரங்கள் எஸ்பி அலுவலக பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,607 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 118 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,513 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 144 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 311 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 25) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 12 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலில் வரும் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆந்திர மாநிலம், கர்நாடகா மாநிலம், வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கு தடை இன்றி வந்து உடனே தரிசனம் செய்து வெளியேறுவதற்கு 600 அரசு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படு என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.