Thiruvallur

News October 16, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது.

News October 16, 2024

அத்தியாவசிய பொருட்களை வழங்கிய துணை முதலமைச்சர்

image

திருநின்றவூர் பகுதியில் உள்ள ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 100 பேரை நேரில் சந்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். உடன் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

News October 16, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in)
அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவு

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் பலத்த கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக சோழவரத்தில் 30 செ.மீ, செங்குன்றத்தில் 27 செ.மீ, ஆவடியில் 25 செ.மீ, பொன்னேரியில் 15 செ.மீ, தாமரைபாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 9 செ.மீ. மழையும் பதிவானது.

News October 15, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி துறை (Logistics and Supply Chain Sector) மூலம் கிடங்கு மேலாண்மை கிடங்கு பிக்கர் மற்றும் பேக்கர் (Warehouse Picker & Packer) பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

சோழவரத்தில் 23செ.மீ. மழை பதிவு

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் பலத்த கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது.
இன்று காலை 6 மணி முதல மாலை 6 மணி வரை நேரத்தில், அதிகபட்சமாக சோழவரத்தில் 23 செ.மீ செங்குன்றத்தில் 23செ.மீ ஆவடியில் 21செ.மீ பொன்னேரியில் 10 செ.மீ தாமரைபக்கத்தில் பகுதியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 4செ.மீ. மழை பதிவானது. பதிவானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

News October 15, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 15, 2024

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

image

திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் நடைபெறும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாளை (அக்.16) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக அரசால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாற்றுத்திறனாளிகள் விட்டிலேயே இருக்கும் பொருட்டு நாளை முகாம் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சியர் அறிவிப்பு.

News October 15, 2024

மாற்றுத்திறனாளிகள் சேவை விருதுகள் தேதி அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகளை முதல்வர் டிச.03ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்க உள்ளார். அதன்படி சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர் கை, கால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பலர் https://awards.tn.gov.in என்ற வலைத்தளம் மூலமாக விண்ணப்பங்களை ஆக்.28க்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் அறிவிப்பு.

error: Content is protected !!