Thiruvallur

News September 4, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 4, 2024

திருவள்ளூர் ஆசிரியர்கள் ஆறு பேருக்கு விருது

image

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு திருவள்ளூரில் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஸ்டேன்லி குமார், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் சு.முரளி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை சி.வரலக்ஷ்மி, தலைமை ஆசிரியை எஸ். மலர்க்கொடி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை இ.காவேரி, தலைமை ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

News September 4, 2024

திருவள்ளூரில் 5,000 ஆண்டுகள் பழமையான கோவில்

image

திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவசுவாமி கோயில் என்பது விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக முதலில் நம்பப்படுகிறது . இங்கு 9 ஆம் நூற்றாண்டின் பல்லவ வம்சத்தின் பிற்பகுதியில் உள்ள கல்வெட்டுகள் உள்ளன. சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று உள்ளூர் புராணங்கள் கூறுகின்றன.

News September 3, 2024

தொழில் முனைவோர்களுக்கு கருத்துரை வழங்கிய கலெக்டர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (03.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் அவர்கள் தமிழ்நாட்டு முதலீட்டு கழக சார்பில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் மற்றும் கருத்தரங்கினை துவக்கி வைத்து மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கருத்துரை வழங்கினார். உடன் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 3, 2024

மின்சார ரயில்கள் இன்று ரத்து

image

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 7:55, 10:55 நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் இரவு 10:20-க்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

News September 3, 2024

பெரியபாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

image

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஸ்ரீ ராமாபுரம் கண்டிகை பேருந்து நிலையம் அருகில் இன்று சவுடு லோடு ஏற்றி வந்த லாரி (கனரக வாகனம்) ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

News September 3, 2024

திருத்தணியில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

திருத்தணி கமலா திரையரங்கு அருகில் திராவிடர் கழக மாணவர் அணி சார்பில் தேசிய கல்வி கொள்கை ஏற்றத்தால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் நிர்பந்திப்பை கண்டித்து திராவிட கழக மாவட்ட தலைவர் ம.மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பொதட்டூர் பேட்டை புவியரசன், கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News September 3, 2024

உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

திருவள்ளூரில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கப்படவுள்ளது. தகுதி உடையவர்கள் www.sdat.tn.gov.in மின்னஞ்சல் மூலமாக செப்.30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News September 3, 2024

திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழையா? கமெண்ட் பண்ணுங்க

News September 3, 2024

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைக்கு தடை

image

விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது எனக் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கக்கோரி சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என உத்தவிட்டது.

error: Content is protected !!