Thiruvallur

News September 6, 2024

உரம் விற்பனையில் முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

image

உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையில் முறைகேடு நடந்தால் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரபி பருவம் தொடங்கி உள்ளதால், விவசாயிகள் நெல் பயிரிட ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை நிலையங்களில் எம்.ஆர்.பி., விலையை விட கூடுதல் விலைக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார்.

News September 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,375 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 58 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,253 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 86 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 303 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (செப்.06) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. புழல், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை செய்யும் என வானிலை மையம் சற்று முன் தெரிவித்துள்ளது.

News September 5, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் சரகத்தில் உதவி ஆய்வாளர் சக்திவேல், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் பிரசன்னா வரதன், திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் குணசேகரன், கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் இன்று (செப்.5) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News September 5, 2024

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

image

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் பகுதியில் உள்ள ரயில் பாதை அருகே அடையாளம் தெரியாத 32 வயது ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் அறிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீசார் அந்த உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News September 5, 2024

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்

image

புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி. இவர் அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக கொண்டு வந்தார். இவரது சேவையை பாராட்டி தமிழக அரசு இருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்தது. இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஆசிரியை இந்துமதிக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.

News September 5, 2024

திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் நீக்கம்

image

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்தது, சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

News September 5, 2024

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்

image

முன்னாள் குடியரசுத தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1888 ஆம் ஆண்டு செப்.5 ஆம் தேதி திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில், பிறந்தார். 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. 1967ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுப் பெற்று சென்னையில் குடியேறினார். 86ஆவது வயதில், சென்னையில் காலமானார்.

News September 5, 2024

சோழவரம் ஏரியில் கலெக்டர் ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் ஏரி பகுதியில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சியர் டாக்டர். த. பிரபுசங்கர் அவர்கள் 40 கோடி மதிப்பீட்டில் சோழவரம் ஏரியில் நீர்க்கசிவு தடுப்புச் சுவர், கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை செயல்விளக்க படத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

News September 4, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேர அவசர உதவி உள்ளிட்ட தகவல்களுக்காக போலீசாரை அவர்களது தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று இரவு பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

error: Content is protected !!