Thiruvallur

News September 30, 2024

திருவள்ளூர் அருகே கட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல்

image

தமிழர் விடுதலைப் படை தலைவர் வீரலட்சுமி இவரது கணவர் கணேசன். இவர்கள் வேப்பம்பட்டு பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு பக்கத்தில் வசிப்பவர் சாப்பிட்ட இலைகளை இவர்களது வீடருகே கொட்டியுள்ளனர்.இதனை வீரலட்சுமி கணவர் கணேசன் தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் வாய் தகராறு ஏற்பட்டு கணேசனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர்.அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

News September 30, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய ஊராட்சிகள் இணைப்பு

image

தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளின் பதவி காலம் முடிந்தவுடன் நகர்புற உள்ளாட்சிகளுக்கு அருகில் உள்ள கிராம உள்ளாட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புடன் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகள் இணைய உள்ளது. சேலை,காக்களூர்,ஈக்காடு,தலக்கஞ்சேரி,புட்லூர்,திருப்பாச்சூர் பகுதி,வெங்கத்தூர்,மேல் நல்லாத்தூர்,தண்ணீர் குளம், சிறுவானூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

News September 29, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 29, 2024

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

image

திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராக்கி என்கிற குமரன் (20). இவருக்கும் ஈக்காடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல், தரணி, எபி, அகஸ்டின் ஆகிய 4 பேருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று ராக்கி வீட்டுக்கு சென்ற 4 பேரும் அரிவாளால் ராக்கியை வெட்டி உள்ளனர். இதை தடுக்க முயன்ற அவருடைய தந்தையையும் வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து 4 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 29, 2024

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கடந்த செ10 முதல் செ24 வரை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 2412 வீரர்களுக்கு இன்று மாலை4 மணி அளவில் பட்டரைபெரும்புதூர் உள்ள சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடக்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 28, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 28, 2024

திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா போஸ்ட்-லிருந்து டெலிவரி முகவரியில் பிழை உள்ளதாகவும் அதனால் பேக்கேஜ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே டெலிவரி முகவரியை புதுபிக்க வேண்டும் என குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பப்படுகிறது. தற்போது டெலிவரி முகவரி பிழைத்திறுத்தம் என புதுவகையான சைபர் மோசடி நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News September 28, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News September 28, 2024

சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

image

சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் குறித்து அவரது கணவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த தீர்ப்பில் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

News September 27, 2024

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் மூலம் வரும் குறுஞ்செய்திகளில் Trading-ல் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் பெறலாம் என போலியான விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இணைப்புகளில் இணைய வேண்டாம் என திருவள்ளூர் காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!