Thenilgiris

News November 11, 2024

கோடநாடு வியூ பாயின்டில் மேக மூட்டம்

image

கோத்தகிரி தாலுகா கோடநாடு எஸ்டேட் எல்லையில் கோடநாடு காட்சி முனை அமைந்து உள்ளது. இங்கு தெங்குமரஹாடா சமவெளி கிராமம், மாயாறு, கர்நாடகா, ரங்கசாமி பில்லர் போன்ற பள்ளத்தாக்கு காட்சிகள் தெரியும். தற்போது பனி மேக மூட்டம் அடர்ந்து உள்ளதால், இவைகளை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது.

News November 11, 2024

நீலகிரி: வாக்காளர் சிறப்பு முகாம் 

image

நீலகிரி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இம்மாதம், 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், voters helpline என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். புதிய இளம் வாக்காளர்கள் ஒருவர் கூட விடுப்படக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.

News November 11, 2024

ஊட்டி கமிஷனர் மீது லஞ்ச வழக்கு பதிவு

image

ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கிர் பாட்ஷா, லஞ்ச பணத்துடன் காரில் செல்வதாக வந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி அவரை பின்தொடர்ந்து தொட்டபெட்டா பகுதியில் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து ரூ.11.70 லட்சத்தை பறிமுதல் செய்து, வீடு, அலுவலகத்தில் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றினார். இதையடுத்து டிஎஸ்பி ஜெயக்குமார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருவதாக இன்று தெரிவித்தார்.

News November 11, 2024

உதவித் தொகை: நீலகிரி பயனாளிகள் அதிர்ச்சி

image

மாநில அரசு முதியோர் உதவித்தொகை,விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக மாதம் தோறும் உதவித்தொகை, SBI வங்கி கணக்குகளுக்கு அனுப்பி விடும். தற்போது வங்கி முகவர்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று இந்த தொகையை வழங்குவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. வங்கிகளுக்கு நேரடியாக பயனாளிகள் வந்து, கை ரேகைகளை பதிவிட்டு பெற்று கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட பயனாளிகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News November 11, 2024

நீலகிரி: ஆபத்தை மீறி அணை நீரில் ‘பைக்’ சவாரி

image

எமரால்டு அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே, ஆற்றோரம் செல்லவோ, அணை நீர் செல்லும் சாலையை வாகனங்கள் மூலம் கடக்கவோ கூடாது என்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் ஆர்வ கோளாறினால் ஆபத்தை உணராமல் சிலர் இரு சக்கர வாகனத்தில் அணை நீரில் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 10, 2024

நீலகிரி தானியங்கி கேமரா பொருத்த நடவடிக்கை

image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் இன்றி அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து சோதனை சாவடிகளிலும் தானியங்கி கேமரா பொருத்தி இ-பாஸூடன் வருபவர்கள் எத்தனை நாட்கள் தங்கி செல்கின்றனர் என்பதனை வாகனப்பதிவு எண்களை கொண்டு துல்லியமாக கண்காணிக்கப்படும். இ-பாஸூன்றி மாவட்டத்திற்குள் வாகனங்கள் நுழைய தடை என ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

எமரால்டு அணை திறப்பு: கலெக்டர் எச்சரிக்கை

image

எமரால்டு அணையில் இருந்து (10.11.24) இன்று முதல் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதனால் அணை நீர் செல்லும் பாதையின் கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரித்து உள்ளார். அவசர உதவி தேவைப்பட்டால் இலவச எண் 1077 மற்றும் 0423 2450034, 0423 2450035 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 10, 2024

லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

image

நீலகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெயகுமார், உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொட்டபெட்டா சந்திப்பில் சொந்த ஊருக்கு ஊட்டி நகராட்சி கமிஷனர் காரில் ரூ.11 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்ற போது வாகனத்தை மடக்கிப்பிடித்து பணத்தை பறிமுதல் செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். நடுஇரவிலிருந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பரபரப்பில் உள்ளது.

News November 10, 2024

அமரன் சினிமா ராணுவ வீரருக்கு இலவசம்

image

ராணுவ வீரரின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் ஊட்டியில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை நாளை மதியம் 2 மணிக்கு காண வரும் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு, ‘நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம்’ சார்பில் இலவச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 9566958093 – 9486175398 – 9159493322

News November 10, 2024

வயநாடு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி

image

வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு பந்தலூர் மேம்பாட்டு குழு சார்பில் ஏற்கனவே மூன்று குடும்பங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது . தற்போது சேரம்பாடியில் கணவனை இழந்த செல்மாவுக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது. பந்தலூர் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீபக் ராம், அனுப், சனுஜா, மகேந்திரன், ஜனனி ஆகியோர் வழங்கினார்கள்.

error: Content is protected !!