India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே டிசம்பர் 25ஆம் தேதி துவங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.11.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை (29/11/24) மாலை 6 மணிக்கு, ராஜ் பவனில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் 6 வகை பழங்குடி மக்களை சந்தித்து பேசுவதுடன், அவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். பின்னர் 5 அரங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்கள் கைவண்ணத்தில் உருவான பொருட்களை பார்வையிடுகிறார். மேலும்,பழங்குடி மக்களுடன் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே டிசம்பர் 25ஆம் தேதி துவங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் (01.12.2024) அன்று நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், (02.12.2024) அன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!
நீலகிரி பல்லுயிர் வலயம் குறித்த ஆவணப்படம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் திரையிடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் திரையரங்கில் நடைபெற்றது. சந்தோஷ் கதூர் இயக்கத்தில் நீலகிரியின் வாழ்வியல் பற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆவணப்பட தயாரிப்பு குழுவை சேர்ந்தவர்களுக்கு கல்வி குழும இணைத் தாளாளர் சங்கர் வானவராயர் பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி, குன்னூர் டைகர்ஹில் பகுதியில் கட்டடத்தின் தூண், சுவர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பராமரிப்பு பணியின் போது தூண், சுவர் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி முருகன் என்பவர் உயிரிழந்தார்.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதில், ‘ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் நாடு வளர்ந்து வருகிறது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்கும் திறன் நமது ராணுவ வீரர்களுக்கு உண்டு’ என்றார்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு நீலகிரியில் வாழும் தோடர் இன பழங்குடி மக்களின் பாரம்பரிய பூத்துக்குளி சால்வையை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்றுள்ள இந்த சால்வையானது பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நூலால் பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ கல்லூரிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்துள்ளார். அங்குள்ள வெலிங்டன் நினைவு தூணிற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் வருகையால் இராணுவ கல்லூரி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.