India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில், மானியத்தில் மின் மோட்டார் கருவிகள் வாங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு கைபேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவிகள் மற்றும் புதிய மோட்டார் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கேட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் மற்றும் அரசு வக்கீல் இடையே காரசார விவாதம் நடந்தது. இந்த வழக்கு ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. புதிய மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி முரளிதரன், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட வழக்கு விசாரணையை, டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஃபெஞ்சல் புயல் 47 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வழியாகச் செல்லவுள்ளது. இதனால், கோவை நீலகிரி மாவட்டங்களில் டிச.1,2,3 தேதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 30 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் எச்சரித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நீலகிரி திமுக இளைஞரணி சார்பில், அமைப்பாளர் இமயம் சசி அவர்கள் தலைமையில், உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தின் முன்புறத்தில் இருந்து 100 இளைஞர்கள், படுகா கலாச்சார உடை மற்றும் படுகா கலாச்சார நடனத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது படுகா நடனத்தை துணை முதல்வர் அவர்கள் வெகுவாக ரசித்து பாராட்டினார்.
➤ புத்தாண்டு விடுமுறை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் ➤ நீலகிரியில் ஹாக்கி போட்டி துவக்கம் ➤ உதகையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ➤ குன்னூர் : அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு ➤ கோத்தகிரியில் நாளை கலைஞர் நூலக திறப்பு விழா ➤ கூடலூர் மாணவர் விடுதியில் அமைச்சர் ஆய்வு ➤ கேரள முன்னாள் எம்பிக்கு கூடலூரில் வரவேற்பு ➤ நீலகிரி பள்ளி ஆசிரியர்களுக்கு ஐஐடியில் பயிற்சி
நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ரூ.11.70 லட்சம் பணத்துடன் லஞ்ச தடுப்பு பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. லஞ்சம் வாங்கிய அவரை உடனடியாக கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்” என்றார் .
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே டிசம்பர் 25, 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
அறிவியல் தொடர்பான செயல்பாடுகளை உருவாக்கும் வகையில் சென்னை ஐஐடியில் சிறப்பு பயிற்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 46 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. குறிப்பாக நீலகிரியில் இருந்து 7 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. பயிற்சியில் ஆசிரியர்களை பங்கேற்க வைக்க பள்ளி கல்வி இணை இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பந்தலூர் அருகே 30 கிமீ தூரம் உள்ள சேரம்பாடி வன சரகம் எல்லைக்கு உட்பட்ட எலியாஸ்கடை கடை பகுதியில் கடந்த சில நாட்களாக யானை முகாமிட்டுள்ளது. மேலும் வனத்துறை வாகனத்தை தாக்கியுள்ளது. நேற்று காலை முதல் சாலை ஓரம் புல் வெளியில் முகாமிட்டுள்ள கொம்பன் யானையை காண வாகனங்களை அருகில் நிறுத்த வேண்டாம் என வனத்துறை எச்சரித்து உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.