Thenilgiris

News December 17, 2024

நீலகிரியில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் அச்சம்

image

நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குன்னூர் அரசு மேல் நிலைப்பள்ளி துவக்கப் பள்ளிக்கு அடிக்கடி கரடிகள் வருகின்றன. அங்கு புதிய சத்துணவு மையத்தின் கதவை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்துகின்றன. இதேபோல் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை பகுதியில் உள்ள குடியிருப்பு நடைபாதைகளில் கரடி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

News December 16, 2024

நீலகிரியில் இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News December 16, 2024

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

image

நீலகிரி: கூடலூர் உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் டேனிபவுல். இவர் நேற்று முன்தினம் உப்பட்டியில் பேருந்துக்காக காத்திருந்த 2 பள்ளி மாணவிகளை காரில் அழைத்து சென்று, ஒருவரை அவரது வீட்டில் இறக்கி விட்டு, மற்றொரு மாணவியை பாலியல் தொந்திரவு கொடுத்துள்ளார். அப்போது அந்தவழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர், அவரை மீட்டு வீட்டில் சேர்த்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவாலா போலீஸ் டேனிபவுலை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.

News December 16, 2024

40 பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் 

image

கோவையிலிருந்து அரசு பேருந்து ஒன்று இன்று கூடலூர் நோக்கி, சுமார் 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. குன்னூர் அருவங்காடு பகுதியில் பேருந்து வந்தபோது, ஓட்டுநர் அப்துல் சலீம் என்பவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அப்போது ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை ஓரத்தில் நிறுத்தினார். உடனடியாக அரசு பேருந்து ஓட்டுநரை, அருகில் இருந்த கார்டைட் பேக்டரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

News December 16, 2024

ஊட்டியில் கிறிஸ்தவ சாட்சிய பேரணி

image

கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி ஊட்டியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்தவ சாட்சிய பேரணி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். மறை மாவட்ட முதன்மை குரு கிரிஸ்ட்டோபர் லாரன்ஸ் துவக்கி வைத்த பேரணியானது மத்திய பேருந்து நிலையம் தொடங்கி லோயர் பஜார், மார்க்கெட் கமர்சியல் ரோடு,சேரிங் கிராஸ் , முக்கிய வழியாக கடந்து வண்டிச்சோலை பகுதியில் உள்ள இருதய ஆண்டவர் பேராலயத்தில் நிறைவடைந்தது.

News December 16, 2024

கோழி வேட்டையில் சிறுத்தை அட்டூழியம்.

image

குன்னூ சேலாஸ் பகுதியில் சிறுத்தை நடமாடி வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் சேலாஸில் உள்ள சந்திரசேகர் என்பவருடைய வீட்டில் வளர்த்து வந்த 3 கோழிகளை சிறுத்தை வேடாடையாடி சென்றுள்ளது. தகவல் அறிந்த வனத்துறை ரேஞ்சர் ரவீந்திரநாத் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

News December 16, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு அடகு செய்யப்பட்ட நில ஆவணங்கள் கடவுசீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே தாயகம் திரும்பியவர்கள் தகுந்த ஆவணங்களுடன் வருவாய் கோட்டாட்சியரை அணுகி பயனடையலாம்.

News December 15, 2024

படுகர் இன மக்களின் சக்கலாத்தி பண்டிகை

image

நீலகிரி மாவட்டத்தில் 400 மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமங்களில் அச்சமுதாய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் சக்கலாத்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தாங்கள் தயாரித்த பலகாரங்களை அண்டை வீட்டாருக்கு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

News December 15, 2024

ஊட்டி பூங்கா மேம்பாடு: ரூ.70.23 கோடி

image

ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் தேவாலா பூங்காவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மத்திய சுற்றுலா துறை ரூ. 70 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக மத்திய சுற்றுலா துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கான மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்து ஹட்கோ டைரக்டர் சபிதா போஜன் நன்றியை தெரிவித்தார்.

News December 15, 2024

நீலகிரி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!