India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குன்னூரில், பெட்போர்ட், நான்காம் மருத்துவமனை, இராஜாஜி நகர் மற்றும் உழவர் சந்தைக்குச் செல்லும் சாலையில் சாலைப் பணிகள் நடைபெறுவதால், வாகனங்கள் இந்த வழியைத் தவிர்க்குமாறு குன்னூர் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் மாற்று வழியான மவுண்ட் சாலை மற்றும் கோத்தகிரி செல்லும் உபாசி சாலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.9) நடக்கிறது. ▶️ஊட்டி: அருளகம் பாஸ்டர் சென்டர் ▶️கூடலூர்: ஆர்தோடெக்ஸ் சர்ச் மண்டம், மர்தோமா நகர் ▶️நெல்லியாளம்: பாரத்மாதா உயர்நிலைப்பள்ளி, உப்பட்டி ▶️ஓவேலி: சமுதாய கூடம், பாரதிநகர் ▶️எப்பநாடு: சமுதாய கூடம், கொதுமுடி ▶️சேரங்கோடு: விஎஸ் ஆடிட்டோரியம் எருமாடு. ▶️பொது மக்கள் இதில் தீர்வு காணலாம்▶️ இதை மற்றவர்களுக்கு SHARE செய்யவும்.

ஊட்டி தலைக்குந்தா சூழல் மையத்தில், நடைபாதை வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால், சேறும் சகதியுமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் நடைபாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026ம் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 5ம் கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், ▶️செப்.23ல் குன்னூர், ஊட்டி, ▶️செப்.24ல் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில், விளைவிக்கும் பூண்டு, மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், வாரந்தோறும் ஞாயிறன்று ஏலம் விடப்படுகிறது. குன்னூர் எடப்பள்ளியில், புதிதாக துவங்கப்பட்ட ஒழுங்குமுறை ஏல சந்தையில் கடந்த, 4ம் தேதி நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு, 145 ரூபாய் கிடைத்தது. கடந்த மாத துவக்கத்தில், 210 ரூபாய் வரை அதிகபட்ச விலை கிடைத்த நிலையில், தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக, தமிழக-கேரளா எல்லையில் உள்ள பாட்டவயல் சோதனைச் சாவடியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், தமிழகத்திற்குள் நுழையும் முன், போலீசார் முழுமையாக சோதனை செய்கின்றனர். பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ், நீலகிரி மாவட்ட விவசாய தொழில்முனைவோர்களுக்கு ₹22 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெறலாம்.இதில் விவசாயிகளுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். விண்ணபிக்க agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.(SHARE பண்ணுங்க)

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக பணியாற்றி வந்த வித்யா, கோவை தமிழ்நாடு வன அகடாமி துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி வரையாடு திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த கணேசன், ஐஎப்எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, முதுமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.முதுமலை மசினகுடி கோட்ட துணை இயக்குனராக சென்னை வனவிலங்கு காப்பாளர் வித்யாதர் மசினகுடி கோட்ட துணை இயக்குனராக நியமனம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.