India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரியில் இரு சக்கர வாகனங்களில், ‘ஹெல்மெட்’ அணிவதன் முக்கியத்துவம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அனைத்து பகுதிகளில், போலீசார் நின்று அபராதம் விதிப்பதும் அவ்வப்போது தொடர்கிறது. எனினும், போலீசார் இல்லாத குறுக்கு பாதைகளில் விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை மலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. போலீசார் தீவிர சோதனை நடத்த கோரிக்கை.

நீலகிரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா தலைமையில் வாராந்திர குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். மேலும் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கமர்சியல் சாலையில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வந்த துணைப் பதிவாளர் மரு.தே.சித்ரா இணை பதிவாளராக இன்று நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உதகை நகரில் ஆவின் வளாகத்தில் அமைந்துள்ள நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 12 தேதி முற்பகல் 11 மணி முதல் முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அப்போது மின் நுகர்வோர்கள் மின் கம்பம் மாற்றம், மின் அபாயம் போன்ற பல்வேறு குறைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் கால் சேகர் தெரிவித்துள்ளார் .

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

நீலகிரி, யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கூடலுார் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்அப்போது, ஊட்டியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா வாகனம் திடீரென பிரேக் பிடிக்காமல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதியில் நுழைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் அங்கு இருந்தவர்கள் சப்தமிட்டு அனைவரையும் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர்.

▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ அதிகம் SHARE பண்ணுங்க யாருக்காவது உதவும் .

நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் யானை வயது 55 உடல்நல குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மேலும் உதவி வனப்பாதுகாவலர் வன பாதுகாப்பு படை , முதுமலை புலிகள் காப்பகம் அவர்களின் முன்னிலையில் யானையின் உடல் அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.