Thenilgiris

News December 25, 2024

மாவட்டம் முழவதும் உறைபனி தாக்கம் அதிகரிப்பு

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் இரவில் உறைபனி தாக்கம் நிலவுகிறது. மேலும், உதகையில் சில பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் கடுங்குளிர் நிலவியது. உதகை மற்றும் குன்னூர் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி நிலவியது. மேலும், வாகனங்கள் மீது உப்பு தூவியதுபோல் உறைபனி கிடந்தன. இந்நிலையில், நீலகிரியில் உறைபனி தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 25, 2024

ஊட்டியில் 3 நாள் குறும்பட விழா

image

நீலகிரி மாவட்ட வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர், குறும்பட விழா ஒருங்கிணைப்பாளர் முகமது பாரூக் கூறுகையில், ‘ஊட்டியில் வரும் 27ஆம் தேதி துவங்கி 3 நாள் நடைபெறும் குறும்பட விழாவில் சிறந்த 23 நடுவர்கள் கலந்து கொள்கின்றனர். 50 நாடுகளை சேர்ந்த 550 குறும்படங்கள் இடம் பெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த குறும்படம் ஜெர்மனி நாட்டில் நடக்கும் குறும்பட விழாவில் திரையிடப்படும்’ எனத் தெரிவித்தார்.

News December 25, 2024

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

image

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா கோத்தகிரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட செயலர் கே.ஜே.குமார், கோத்தகிரி மண்டல் தலைவர் ஆல்தொரை, கோத்தகிரி பொது செயலர் சந்திர மோகன், செயற்குழு உறுப்பினர் அன்பரசன், சி.பி.ராமசந்திர ரெட்டி பலர் பங்கேற்றனர்.

News December 25, 2024

வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

image

உதகை நகர பாஜக சார்பில்,முன்னாள் பாரதப் பிரதமரும், பொக்ரான் அணுகுண்டு ஏவுகணை நாயகனுமான, அடல் பிகாரி வாஜ்பாய் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு உதகை ஏ.டி.சி பாஜக அலுவலகம் முன்பாக இன்று மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் காலை 11:30 மணிக்கு அட்டல் பிகாரி வாஜ்பாயின் படத்திற்கு மாலை அணிவித்து 100வதுபிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News December 25, 2024

எஸ்பி அலுவலக ஃபேஸ்புக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து

image

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக முகநூல் பக்கத்தில் நீலகிரியில் நடைபெறும் காவல்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இடம்பெறும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துகளை முகநூல் பக்கத்தில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது.

News December 25, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவிகள்

image

2024-25ஆம் ஆண்டுக்கான அரசு வேளாண் நிதியில் இருந்து கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் டில்லர் மற்றும் களை எடுக்கும் கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆதி திராவிடர் பிரிவி சார்ந்த விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் உதவிடும் வகையில் மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

News December 25, 2024

கோத்தகிரி ஜமாத் சார்பாக ஆட்சியரிடம் நன்கொடை வழங்கல்

image

மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கோத்தகிரி ஜமாத் சார்பாக பாவா சிக்கந்தர் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை நீலகிரி ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுரேஷ் கண்ணன் உடன் இருந்தார்.

News December 25, 2024

தயாராகும் மாற்றுப்பாதை: புத்தாண்டில் பணிகள் துவக்கம்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு வராமல் பல கோடி ரூபாயில் மாற்றுப்பாதை தயாராகி செயல்பட்டும் வருகிறது. இந்நிலையில் உதகை நகருக்குள் வராமல் கூடலூர் செல்லும் வாகனங்கள் நகரின் நுழைவு பகுதியான லவ்டேல் – மஞ்சனக்கொரை -மு பாலாடா- பெர்ன்ஹில் -பிங்கர் போஸ்ட் வழியாக கூடலூர் சாலையை வந்தடையும் திட்டம் ரூ 81 கோடி செலவில் வரும் புத்தாண்டு முதல் பணிகள் துவங்கப்பட உள்ளது. இதனால் நகரில் வாகன நெரிசல் குறையும்.

News December 25, 2024

நீலகிரி மாவட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

image

ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். பெண் மற்றும் ஆண் காவலர்கள் நடத்திய அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள், உடை மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்தார். இதர பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

News December 25, 2024

இன்று முதல் 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கம்

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து இன்றுமுதல் 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி.

error: Content is protected !!