India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்தரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “டால்பின்ஸ் நோஸ் பகுதியில் சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், காட்சிமுனை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். சுற்றுலாப் பயணிகள் யாரும் அங்கு வர வேண்டாம்” என அறிவுறுத்தபட்டள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்கு தாக்குதலால் பொதுமக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதால், வியாபார சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சேரம்பாடி பஜார் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடிய நிலையிலும், நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் செல்போன் டவர்கள் இல்லாததால், பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இப்பகுதியில் உள்ள கடைகளில் யுபிஐ பேமெண்ட் வசதிகளையும் பயன்படுத்த முடியவில்லை என்று பொது மக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் இப்பகுதியை முன்னேறிய பகுதியாக மாற்ற அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு குன்னூர் வருவாய் துறையினர் 8 ஏக்கர் நிலத்தினை நீதிமன்ற நீதிபதிகளிடம் வழங்கினர். கடந்த பல வருடங்களாக நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. நீதிமன்றத்திற்கு 2004ஆம் ஆண்டு முதல் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த இடம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 6 மாதமாக வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் பர்மிட் வழங்குவது, தகுதித் சான்று புதுப்பிப்பு, கனரக ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் பாதிப்படைந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மக்களின் நலன் கருதி விரைவில் நிரந்தர ஆர்டிஓ நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து விளையாட்டு மேம்பாட்டிற்காக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கல்லூரி மற்றும் கூடலூர் அரசு கல்லூரிகளுக்கு ரூ 2.10 லட்சம் மதிப்பில் தலா 3 கிட், நீலகிரி பாலிடெக்னிக் கல்லூரிக்கு 1.50 லட்சம் மதிப்பில் 2 கிட், என மொத்தம் 8 கிட்கள் ரூ 5.70 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது.

கல்லூரி, பள்ளி குழு சுற்றுலா அதிகரிப்பு ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைன்பாரஸ்ட், ஏரிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பின ஊட்டி
நீலகிரி மாவட்டத்தின் மலைவாசஸ்தலமான ஊட்டி, வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தாலும், கோடை மற்றும் இரண்டாம் சீசன் தொடங்கியவுடன் சுற்றுலா கூட்டம் குவிகிறது. இதமான காலநிலை, பசுமையான இயற்கை, மலை ரயில், தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தளங்களும் நிரம்பியது.

நீலகிரி மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <

நீலகிரி மக்களே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20மண்டலங்களில் இருந்து ராமேஸ்வரம்- காசி விசுவநாதர் கோயிலுக்கு இலவசமாக ஆன்மீக பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.www.hrce.tn.gov.in இதிலிருந்து விண்ணப்பம் பதிவிறக்கலாம். பூர்த்தியான விண்ணப்பத்தினை அக்.22ம் தேதிக்குள் மண்ட இணை ஆணையர் அலுவலத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். மேலும், விவரங்களுக்கு 18004251757 அழைக்கவும். இதை ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.