Thenilgiris

News December 28, 2024

நீலகிரியில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

image

நீலகிரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு. பள்ளி அரையாண்டு போன்ற விடுமுறைகள் தொடர்ச்சியாக வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறையை ஒட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா போன்றவற்றில் கூட்டம் அலைமோதி வருகிறது.

News December 28, 2024

நீலகிரி: ஒரு வாரத்திற்கு பின் மக்கள் நிம்மதியான தூக்கம்

image

நீலகிரி சேரங்கோடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக புல்லட் யானை மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று சுமார் 35 வீடுகளை இடித்து, புகுந்து அரிசி உப்பு போன்றவற்றை தின்று அச்சுறுத்தி வந்ததால் அப்பகுதி மக்கள் தூக்கம் இன்றி தவித்து வந்தனர். நேற்றைய தினம் புல்லட் மயக்க ஊசியால் பிடிபட்டதை அடுத்து மக்கள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக தூங்கினர்.

News December 28, 2024

பிடிக்கப்பட்ட புல்லட் யானை: வன அலுவலர் தகவல்

image

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புல்லட் யானையை பொக்லைன் மற்றும் கும்கிகள் விஜய் மற்றும் சீனிவாசன் யானைகள் உதவியுடன், மயக்க நிலையில் இருந்த யானை, 7:45 மணிக்கு லாரியில் ஏற்றப்பட்டது. வன வெங்டேஷ் பிரபு கூறுகையில், ”இந்த யானைக்கு மயக்கம் தெளிந்த பிறகு, வனத்துறை உயரதிகாரிகள் ஆலோசனையின் பேரில் எந்த வனப்பகுதியில் விடுவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார்.

News December 28, 2024

புல்லட் யானையை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுதல்

image

பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி பகுதியில் நேற்று ‘புல்லட்’ யானைக்கு மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். யானை மயக்க நிலையை அடைந்த பிறகு, அதன் 4 கால்களையும் கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர். தற்போது இந்த யானையை கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக கூடலூர் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

News December 27, 2024

நீலகிரி மாவட்ட காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (27.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News December 27, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.புல்லட் யானையை பிடிக்க வந்த பொம்மன் கும்கிக்கு மதம்
2. புல்லட்யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
3.தவெக சார்பில் மன்மோகன்சிங் படத்துக்கு மலர் அஞ்சலி
4.நீலகிரியில் கடும் மேகமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
5.ஆடர்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

News December 27, 2024

சேரங்கோட்டில் பிடிபட்ட புல்லட் யானை

image

சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக 35க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய புல்லட் என்ற காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் கொளப்பள்ளி அய்யன்கொல்லி சாலையில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்த புல்லட் யானையை, வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

News December 27, 2024

2 வது மயக்க ஊசி போட போக்கு வரத்து நிறுத்தம்

image

மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் உள்ளிட்ட வன துறையினர் புல்லட் யானையை ட்ரோன் கேமராவில் கண்காணித்து அய்யன்கொல்லியில் ஒரு மயக்க ஊசி போட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு ஊசியை செலுத்த தயாராகி வருகின்றனர். இதனால் கொலப்பள்ளி, அய்யன்கொல்லி சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

News December 27, 2024

புல்லட் யானைக்கு போடபட்ட மயக்க ஊசி 

image

நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு வாசிகளை கதி கலங்க வைத்து 75 வன துறையினருக்கு போக்கு காட்டிய புல்லட் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கால்நடை டாக்டர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் ஆகியோர் ட்ரோன் மூலம் கண்காணித்து அய்யன்கொல்லியில் வைத்து ஒரு ஊசியை செலுத்தி உள்ளனர்.

News December 27, 2024

கும்கி யானைக்கு மதம் புல்லட் பிடிப்பதில் தொய்வு

image

நீலகிரி புல்லட் யானையை பிடிக்க வந்த கும்கி யானை மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், வீட்டை இடித்து சேதம் படுத்துவதாக தொடர்ந்து மக்கள் புகார் வைத்து வந்தனர். இதை பிடிக்க பொம்மன் என்ற கும்கி யானை வரவழைக்க பட்டது. அதற்கு மதம் பிடித்ததால் கட்டி வைத்து உள்ளனர். இதனால் புல்லட்டை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.

error: Content is protected !!