Thenilgiris

News January 2, 2025

சைபர் கிரைமில் இதுவரை ரூ.2 கோடி மீட்பு

image

ஆன்லைன் மோசடியில் முதலீடு செய்தால் அதிக லாபம், திருமண செயலி, நெட் பேங்க் எண் மாற்றம், ஓஎல்எக்ஸ் செயலி வாயிலாக கடன், கூகுள் ரிவ்யூ சேவை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜிஎஸ்டி வரி, வேலைவாய்ப்பு போன்ற பல வகை மோசடி குறித்து புகார்கள் வருகின்றன. இதுவரை வந்த 80 புகாரில் 25 தீர்வு கண்டு முடிக்கப்பட்டது. இதுவரை ரூ.2 கோடி மீட்கப்பட்டுள்ளது. எனவே சைபர் கிரைம் 1930 எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News January 2, 2025

முதுமலையில் தாயை இழந்த குட்டி யானைக்கு ஹீட்டர் வசதி

image

முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட தாயை இழந்த குட்டி யானைக்கு, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மற்றும் பசிக்கும் நேரங்களில் ‘லாக்டோஜன்’ பால் பவுடர், குளுக்கோஸ், தண்ணீர் வழங்கி வருகின்றனர். தற்போது, குளிர்காலம் என்பதால், கராலினுள் ஹீட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலை,மாலை நேரத்தில் நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. குட்டி யானைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் அருகே வெளி நபர்கள் அனுமதிப்பதில்லை.

News January 2, 2025

பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ. 20.37 விலை நிர்ணயம்

image

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் விநியோகம் செய்யும் பசுந்தேயிலைக்கு, இந்திய தேயிலை வாரியம் மாதம் தோறும், குறைந்த பட்ச கொள் முதல் விலையை நிர்ணயித்து வருகிறது. தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் விவசாயிகள் தொழிற்சாலைக்கு விநியோகம் செய்த தேயிலை கிலோவுக்கு குறைந்த பட்ச விலையாக 20.37 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

News January 1, 2025

நீலகிரியில் 72 பாலியல் குற்ற வழக்குகள் பதிவு

image

நீலகிரியில் கடந்த 2024-ல் 72 பாலியல் குற்ற வழக்குகள் மற்றும் 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. பாலியல் குற்றங்களைக் குறைக்கும் வகையில் 2024-ம் ஆண்டு 3516 விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டு உள்ளன. மேலும் 17 பாலியல் குற்ற வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 32 வருட சிறை மற்றும் ஒரு வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என நீலகிரி எஸ்பி, நிஷா தெரிவித்தார்.

News January 1, 2025

உதகை உருளைக்கிழங்கு இன்றைய ஏல விலை நிலவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மேட்டுப்பாளையம் கிளை சார்பாக, நாள்தோறும் உதகை உருளைக்கிழங்கு ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆரிகவுடர் ஏல மையத்தில் இன்று ராசி வகை உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டைக்கு அதிகபட்சமாக ரூ.1,720-க்கும் குறைந்தபட்சமாக ரூ.1,090-க்கும் ஏலம் போனது. பொடி வகை அதிகபட்சமாக ரூ.720-க்கும் குறைந்தபட்சமாக ரூ.380-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1375 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.

News January 1, 2025

ஊட்டியில் போக்குவரத்தை சரி செய்ய கூடுதல் போலீசார்

image

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிக வாகனங்கள் சமவெளி பகுதியில் இருந்து ஊட்டிக்கு வரும் என்பதாலும், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வருகை அதிகரிக்கும் என்பதாலும், சேரிங் கிராஸ், பிங்கர் போஸ்ட், தலைகுந்தா செக் போஸ்ட், மைசூர் ரோடு, லவ்டேல் ஜங்ஷன் ஆகிய இடங்களில் அதிகளவு போலீசார் பணியில் உள்ளனர். நேற்று காலை முதலே போக்குவரத்து சரிசெய்யும் பணியில் உள்ளனர்.

News January 1, 2025

சென்னை மலர் கண்காட்சிக்கு ஊட்டி மலர்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியில், லட்சக்கணக்கான மலர்களை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், திரளான சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் செம்மொழி பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன. 2 ல் திறந்து வைக்கிறார். இதற்காக ஊட்டி பூங்காவில் இருந்து மலர் தொட்டிகள் எடுத்து செல்லப்பட்டன.

News December 31, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நீலகிரி: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 101 கோரிக்கை மனுக்கள் ➤ மசினகுடிக்கு சரக்கு வாகனங்கள் அனுமதி ➤ காட்டு எருமை முட்டி விவசாயி படுகாயம் ➤ ஊட்டியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: 400 பேர் கைது ➤ ஒவேலியில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் ➤ உதகை:வளர்ப்பு நாயை கொன்ற சிறுத்தை ➤ வெறிச்சோடிய வெலிங்டன் ராணுவ படகு இல்லம் பூங்கா ➤ ஊட்டிக்கு ரூ.40 கோடியில் புதிய சாலை

News December 31, 2024

நீலகிரியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

image

நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ”நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு, ரோந்து மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவார்கள். சுற்றுலா தலங்களில் சீருடை அல்லாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

புதுமை பெண் விரிவாக்க திட்டத்தில் ரூ.3,22,000 உதவி தொகை

image

நீலகிரி ஆட்சியரின் கூடுதல் அலுவலகத்தில் நேற்று நடந்த புதுமை பெண் திட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கி பேசுகையில், ‘புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 கல்லூரிகளில் பயிலும் 322 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

error: Content is protected !!