Thenilgiris

News September 16, 2025

நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில், உதகையில் வரும் 19ம் தேதி, காலை 10 மணி முதல், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

image

கூடலுார், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் பாண்டியர் டான்டீ தேயிலை தோட்டம் வழியாக வருகின்றன. பின், இரும்புபாலம், பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் வழியாக சாலையை கடந்து கூடலுார் – கோழிக்கோடு சாலையை இரவு மற்றும் காலை நேரத்தில் காட்டு யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,’ என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

News September 16, 2025

நீலகிரி மக்களே: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க

image

நீலகிரி மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

நீலகிரி: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. ▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். ▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

நீலகிரி: பொதுக்கூட்டத்தில் நுழைந்ததால் பரபரப்பு!

image

குன்னூரில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய சிலர், நகராட்சியில் நடக்கும் தி.மு.க., ஊழல் குறித்தும், அரசு கொறடாவையும் விமர்சித்து பேசியுள்ளனர். அப்போது கோபமான, மாவட்ட செயலாளர் ராஜூ ஆதரவாளர்கள் செல்வம், கோவர்த்தனன், பாரூக் உட்பட திமுகவினர் சிலர், அதிமுகவினரின் பொதுக்கூட்டத்திற்கு சென்று, ஒலிபெருக்கியை நிறுத்துமாறு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர்.

News September 16, 2025

கூடலூர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

image

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்காக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணை செயலாளர் கார்த்திக் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு சகா கட்சித் தோழர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News September 16, 2025

நீலகிரி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

image

நீலகிரி மாவட்டம், சீகூர் பள்ளத்தாக்கில், மாயார், சோலுார் உள்ளிட்ட பகுதிகள் யானை வழித்தடமாக உள்ளன. சீகூர் யானை வழித்தடத்தில் சீல் வைக்கப்பட்ட விடுதிகளை, இடித்து அகற்ற தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ”யானைகள் வழித்தடத்தில் உள்ள, 39 தங்கும் விடுதிகளை விரைவில், இடிக்கபடும். யானைகள் வழித்தடம் குறித்து, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

News September 16, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News September 15, 2025

நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி நகராட்சி பகுதிகளுக்கு சீனிவாசா திருமண மண்டபத்திலும், நெல்லியாலாம் பகுதி பாண்டியர் குடோன் பகுதியிலும், உள்ளத்தி பகுதிகளுக்கு உள்ளத்தில் சமுதாயக் கூட்டத்திலும், நிலக்கோட்டை பகுதிகளுக்கு பாட்டவயல் எம்வி சன்ஸ் கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

News September 15, 2025

அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கிய அரசு கொறடா

image

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், அன்புக்கரசன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவ, மாணவிகளில் 23 மாணவ, மாணவிகளுக்கு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில் ரூ.2,000/- உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் .ஆர்.கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!