Thenilgiris

News January 16, 2025

பழங்குடியினருடன் பொங்கல் வைத்த எஸ்பி

image

நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூதனத்தம் ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நீலகிரி காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பொங்கல் வைத்து , பொங்கல் பொங்கி வரும் போது மக்களுடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு சிறப்பாக கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

News January 16, 2025

கோத்தகிரியில் பிளாஸ்டிக்’ பயன்பாடு அதிகரிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, 21 வகை ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோத்தகிரி பேரூராட்சியில், மீண்டும் ‘பிளாஸ்டிக்’ கேரிபேக் உட்பட தடை செய்யப்பட்ட ‘பிளாஸ்டிக்’ பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News January 15, 2025

நடமாடும் இலவச காசநோய் பரிசோதனை முகாம்

image

தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம், மக்களை தேடி மருத்துவம் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம், பொது மக்களுக்கு இலவச காச நோய் பரிசோதனை முகாம், அருவங்காடு ஓசட்டி பகுதியில் இன்று நடைபெற்றது. சுமார் 50 க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் ஆண்டனி செபாஸ்டின் மற்றும் அருவங்காடு சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

News January 14, 2025

இளம் வல்லுனராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்! 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுனராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கணிப்பொறி, தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் படித்தவர்கள் வரும் 23ம் தேதிக்குள் ddsooty@gmail.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News January 14, 2025

‘பெட்டா குயின்’ நீராவி எஞ்சின் இயக்கம்

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே நீராவி எஞ்சின் மூலம் பெட்டா குயின் நீராவி எஞ்சின் மூலம் நேற்று இயக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் அறிமுக படுத்தப்பட உள்ள நிலையில், 35 ரயில்கள் இயக்க திட்டமிட பட்டு உள்ளது. அதில் நீலகிரி ரயிலும் எரிபொருள் கொண்டு இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது” என்றனர்.

News January 14, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 14, 2025

தொடங்கியது படுகர் இன பாரம்பரிய திருவிழா

image

கோத்தகிரி பேரகணி பகுதியில் படுகர் இன பாரம்பரிய எத்தையம்மன் திருவிழா இன்று காலை தொடங்கப்பட்டது. இந்த பண்டிகையில் பல்வேறு ஊர்களில் இருக்கும் படுகர் இன மக்கள் தவறாமல் கலந்து கொண்டு, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வழிபடுவார்கள். இந்த பண்டிகையானது பேரகணி பகுதியில் இருந்து தொடங்கப்பட்டு 7 நாட்கள் வெவ்வேறு ஊர்களில் கொண்டாடப்பட்டு பின்னர் மீண்டும் பேரகணி பகுதியில் முடிவடைகிறது.

News January 13, 2025

நீலகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, பொதுமக்களிடமிருந்து அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் இருந்தனர்.

News January 13, 2025

உதகையில் Maggi நூடுல்ஸ் பாக்கெட்டில் புழு

image

நீலகிரி மாவட்டம் உதகையில் மளிகை கடையில் வாங்கிய (Maggi) நூடுல்ஸ் பாக்கெட்டில் வெள்ளை நிறத்தில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். நூடுல்ஸ் பாக்கெட்டில் காலாவதி ஆவதற்கு ஒரு மாத காலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர் சமைப்பதற்கு முன் நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் இருப்பதை கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

News January 13, 2025

சமத்துவ பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், பொங்கல் பொருட்களை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக்கிடம் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!