India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நீலகிரி மக்களே, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் உதவி பொது மேலாளர், டேட்டா அனலிஸ்ட், ஐடி செக்யூரிட்டி, ஐடி இன்பிராஸ்ட்ரக்சர் என 41 வகையான பதவிகளில் 349 பணியிடங்கள் உள்ளன. B.E/B.Tech, MCA, M.Sc உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

கூடலூர் அடுத்துள்ள எல்லமலை பகுதியில் ஆட்கொல்லி யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆட்கொல்லி யானை வனத்துறைக்கு டிமிக்கி காட்டி வருகின்ற சூழலில் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் எல்லமலை ஆதிவாசி காலனி குடியிருப்பு அருகே இந்த ஆட்கொல்லி யானை வருவதால் அப்பகுதியில் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வீட்டை விட்டு யாரும் வெளிவர வேண்டாம் என எச்சரிக்கை.

நீலகிரி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – செப். 23 ஆகும். விவரங்களுக்கு <

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், “நீலகிரியில் விதிகளைமீறி கட்டப்பட்ட கட்டடங்களில் ஆய்வு மேற்கொண்டு, சீல் வைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கட்டட அனுமதியை பொறுத்தவரை 3 துறைகளின் ஆய்விலும் விண்ணப்பங்கள் சரியாக இருக்க வேண்டும். ஒருசிலர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்று தருகிறோம் என கூறி மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் வருகின்றன. அத்தகைய நபர்களை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊட்டி நகராட்சி லவ் டேல் லீனா தொடக்கப்பள்ளி மைதானத்திலும், கூடலூர் நகராட்சி ஜானகி அம்மாள் திருமண மண்டபத்திலும், நெல்லிகால நகராட்சி பகுதிகளுக்கு ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதிகளுக்கு மண்வயல் சமுதாய கூடத்திலும், கடநாடு ஊராட்சி பகுதிகளுக்கு கடநாடு சமுதாய கூட்டத்திலும் நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் சுண்டட்டி கொட்டனல்லி மற்றும் சுற்றுலா பகுதிகளில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் சுப-துக்க நிகழ்ச்சிகளில் மது வழங்கக் கூடாது. மேலும் மது வழங்குவோர் சுப நிகழ்ச்சிகளுக்கு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுப்பு வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.

நீலகிரி மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகள் சந்திக்கும் சுருக்கி பாலம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் மழையின் காரணமாக ஆற்றின் நீர் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்த எமரால்டு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா, தற்கொலையா, என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.