Thenilgiris

News September 24, 2025

நீலகிரியில் பரபரப்பு.. 97 பேர் கைது!

image

நீலகிரி: சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடந்தது. அந்தவகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பணி நிரந்தரம் செய்ய கோரி ஏடிசி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News September 24, 2025

ஊட்டி: சுற்றுலா பயணிகளை கவரும் பப்பாளி மரம்

image

ஊட்டி தாவரவியல் பூங்காவில்சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் இங்குள்ள பப்பாளி மரம் ஒன்றில் (அழகு தாவர வகை) சிறு சிறு பப்பாளி பழங்கள் அதிகளவு காய்த்துள்ளன.பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த பழங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அழகு தாவரங்களில் காய்த்துள்ள இந்த பழங்களை பார்த்து ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை சுவைக்க அச்சப்படுகின்றனர் .

News September 23, 2025

ஆர்கே யானையை பிடிக்க உதவிய வாசிம், விஜய் கும்கிகள்!

image

நீலகிரி, கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 12 பேரைக் கொன்ற ‘ஆர்கே’ எனப்படும் ராதாகிருஷ்ணன் யானை, இன்று ஏழாவது நாள் தேடுதலுக்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. யானையை நெருங்க அச்சமிருந்ததால், முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகளான விஜய், வசிம் ஆகியவற்றின் உதவியுடன் காட்டு யானை வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.

News September 23, 2025

ஊட்டி அதிமுக கூட்டத்தில் 300 பேருக்கு பிரியாணி!

image

உதகை ஏடிசி பகுதியில் தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் எழுச்சி பயணம் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  இன்று பேசினார். இந்த கூட்டத்திற்கு உதகை நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஹக்கீம் பாபு தொண்டர்கள் 300 பேருக்கு மதியம் சிக்கன் பிரியாணி மற்றும் ஜூஸ் வழங்கி கூட்டத்தில் வழங்கினார்.

News September 23, 2025

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூரில், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரப் பயணத்தின்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை முற்றிலுமாக நீக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

News September 23, 2025

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 26, 27 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News September 23, 2025

நீலகிரி: 12 பேரைக் கொன்ற யானை பிடிபட்டது!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஓவேலி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த 12 பேரைக் கொன்ற ‘ராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. ஓவேலி பகுதியில் இந்த யானையை, வனத்துறையினர் கடந்த 5 நாட்களாக தேடி வந்தனர். பின்னர், எல்லமலை குறும்பர் பள்ளம் பகுதியில் பரண்கள் அமைத்து, மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

News September 23, 2025

நீலகிரியில் அச்சத்தில் பொதுமக்கள்!

image

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு மூன்று கரடிகள் மஞ்சூர் கடைவீதிக்குள் நுழைந்து உலா வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும், வனவிலங்குகள் இவ்வாறு உலா வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

News September 23, 2025

நீலகிரியில் ஈபிஎஸ் சுற்றுப்பயண விபரம்!

image

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தனது சுற்றுப்பயணத்தை இன்று நீலகிரி மாவட்டத்தில் நடத்துகிறார். அதன்படி, இன்று முற்பகல் 11 மணிக்கு குன்னூரிலும், நண்பகல் 1 மணியளவில் உதகையிலும் அவர் பேசவுள்ளார். அதை தொடர்ந்து, மாலை 4 மணியளவில் உதகையில் நடைபெறும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

News September 23, 2025

நீலகிரி: DRIVING தெரிந்தால் அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க.. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!