India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உப்பட்டி சேரம்பாடி மற்றும் கூடலூர் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில், வரும் 20ம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணை மின் நிலையங்களில் சேர்ந்த பகுதிகளான கூடலூர், ஸ்ரீ மதுரை, நிலக்கோட்டை, தேவர் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, மத்திய பாதுகாப்பு படையில் உள்ள அக்னிவீர் திட்டத்தில், சேர விரும்புவர்கள், வரும் 27 ஆம் தேதிக்குள் தகுந்த கல்வித் தகுதியுடன் https://agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதற்கு 12-ம் வகுப்பு ஈடான கல்வித் தகுதியில் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே காட்டு குப்பையில்,1,850 கோடி ரூபாய் மதிப்பில், குந்தா நீரேற்று மின் திட்டம், 4 பிரிவுகளாக நடக்கிறது. அதில், ஒரு பிரிவில், 125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் உற்பத்திக்கு, குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக, எமரால்ட், போர்த்தி மந்து அணைகளிலிருந்து, இது வரை,100 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது; அடுத்த மாதம் இறுதி வரை இப்பணிகள் நடக்கும்,’ என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.1.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது
நீலகிரி: கோத்தகிரி காம்பாய்கடை பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் இன்று கோத்தகிரி புயல் நிவாரண கூடத்திலிருந்து, தாசில்தார் அலுவலகம் செல்லும் தாழ்வான சாலையில், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது காரின் பிரேக் பிடிக்காததால், அவரது கட்டுப்பாட்டை இழந்து தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் அருகே இருந்த இரும்பு கம்பத்தில் மோதி நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பருவ மழை நிறைவு பெற்ற நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்து செடிகள், புற்கள் போன்றவை பனியில் கருகி உள்ளன. இதனால் வனத்தில் இருந்து வெளி வரும் யானைகள், குடிநீர், உணவு தேடி, மைசூரு தேசிய நெடுஞ்சாலையை, அடிக்கடி கடந்து, மாயாறு ஆற்றை நோக்கி வர தொடங்கி உள்ளன. எனவே பயணிகள், வாகனங்களை நிறுத்தி, இடையூறு செய்வது கூடாது என வனத்துறை எச்சரித்து உள்ளது.
நீலகிரியில் உள்ள கற்பூரம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நீலகிரி வனக்கோட்டம் சார்பில், ஊட்டி, குந்தா, குன்னூர், கூடலுார், பந்தலுார், அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை,300 ஏக்கர் பரப்பளவில் அந்நிய அகற்றப்பட்டன. தற்போது,ஊட்டி அருகே தலைகுந்தா, அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை அகற்ற அகற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பூதனத்தம் ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுடன், நீலகிரி காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பொங்கல் வைத்து , பொங்கல் பொங்கி வரும் போது மக்களுடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு சிறப்பாக கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
குன்னூர் பேருந்து நிலையப் பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறையினரின் கடும் நடவடிக்கையால் பல ஆண்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சிரமம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் தள்ளுவண்டி கடை முளைத்துள்ளன. இதைப் பார்த்து மற்றவர்களும் கடை வைக்க துவங்கினால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகக் காரணமாக அமைந்து விடக்கூடும். தேவை நடவடிக்கை.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த யானைப்பொங்கல் விழாவில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு வளர்ப்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. யானைகளுக்கு பொங்கல், பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.விழாவில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். திரளாக சுற்றுலா பயணிகள் யானைப் பொங்கலை ரசித்தனர்.
Sorry, no posts matched your criteria.