India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீசார் வந்திருந்த நிலையில் இன்டர்போல் சர்வதேச விசாரணை நடப்பதால் மேலும் கால அவகாசம் தேவை என கேட்கப்பட்டதால் வழக்கை பிப்.21ம் தேதிக்கு நீதிபதி முரளிதரன் ஒத்திவைத்தார்.
தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட நம்பர் 3 டிவிஷன் என்ற பகுதியை சார்ந்த ஜெம்சித் என்ற இளைஞரை அதிகாலையில் யானை தாக்கி கொன்றது. இவரது உடல் கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யானை தாக்கி உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், 10 மலையேற்றம் வழித்தடங்களில், மலையேற்றம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மலையேற்ற வழித்தடத்தில், கூடலூர் வழித்தடத்தில் மலையேற்றம் செல்ல, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை, ஜீன்பூல் தாவர மையத்திலுள்ள மலையேற்ற வழித்தடத்தில் 13 குழுக்கள்; ஊசிமலை மலையேற்றம் வழித்தடத்தில் மூன்று குழுக்கள் மலையேற்றம் சென்று வந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (24.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சி கூடுதல் கட்டிடத்தில் நடந்தது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள். மேற்பட்ட விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் பரிசீல் இன்னைக்கு வந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்கள்.
உதகை பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லேகல் பகுதிக்குமீண்டும் கர்நாடக மாநில பேருந்து. இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து மீண்டும் பயணிகள் வசதிக்காக ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் சாம்ராஜ்நகர் செல்வதற்கு ஒரே பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து சத்தியமங்கலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களில் 6 நபர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை கேரளா சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றது. அப்பகுதியில் இருக்கும் நீர்நிலைகளில் நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்னுார் மார்க்கெட்டில், 20.74 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் மற்றும் ஊழியர்கள், ‘சீல்’ வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அதிகாரிகள் கூறுகையில், ‘அதிகபட்சமாக வாடகை பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் உரிய வழிகாட்டுதலோடு, திருநங்கை மற்றும் இடைபாலின நபர்களுக்கான, குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில், திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் முகாம், மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர் தலைமையில் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில், இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி காட்டும் அலுவலகத்தில், தனியார் நிறுவனங்கள் பங்கு பெறும், வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5ம் வகுப்பு முதல் பட்டதாரி வரை படித்தவர்கள், ஓட்டுநர் முதல் கணினி இயக்குபவர் வரை, பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.