India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, நீலகிரி மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் லஞ்சமாக பெற்ற, நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் என்பவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி குன்னூரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இவரை அணுகியபோது, லஞ்சம் பெற்ற தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து 2020, 2021 ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கமான, அதி – உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வென்ற சிறந்த காவல் அதிகாரிகளுக்கு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா இன்று பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ளது எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் பாலதண்டாயுதபாணியின் வடிவமைப்பு போல, இங்கு முருகப்பெருமானின் வடிவமைப்பும் உள்ளது. அதேபோல், 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்களும், 108 திருநாமங்களை நினைவுகூரும் வகையில் 108 படிகளும் உள்ளன. மேலும், 40 அடி உயரத்தில் முருகன் கம்பீரமாக மலை நடுவே எழுந்தருளி உள்ளார்.
கர்நாடகா எல்லையான கக்கநல்லா, கேரளா எல்லையான நாடுகாணி, சோலாடி, நம்பியார் குன்னு, பாட்ட வயல், தாளூர், பூலகுண்டு, மணல்வயல், கோட்டூர் ஆகிய பகுதிகளில் எல்லை சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு போலீசார், வனத்துறை, இ-பாஸ் பணியாளர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவாலா டிஎஸ்பி ஜெயபால் நேற்று கூறுகையில், “கடந்த 6 மாதங்களில் 103 வழக்குகள் பதிய பட்டு உள்ளது” என்றார்.
நீலகிரி கால்பந்து சங்கம் சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான, கோவை டெக் பர்ஸ்ட் டிவிஷன் சாம்பியன்ஷிப் கால்பந்து நேற்று தொடங்கியது. இது ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விளையாடும் 10 அணிகளில் முதல் இடத்தை பிடிக்கும் அணி, தமிழ்நாடு கால்பந்து சங்கம் நடத்தும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 16 புதிய வழி தடங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்க படுகிறது. மேலம் தனியார் மற்றும் நிறுவனங்கள் புதிய வழி தடங்களில் மினி பஸ் இயக்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளார்.
பந்தலூர் குந்தலாடி சிவன் காலனி பகுதியை சேர்த்தவர் ராஜரத்தினம் (52). தனியார் தோட்ட இரவு காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பக்கானா கேட் என்ற இடத்தில் சாலை ஓரம் அவரது உடல் கிடந்தது. நெலாக்கோட்டை போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக ஊட்டி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஊட்டிக்கு வருகை புரிந்தார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கட்டுமான பணிகள் நிறைவு அடைந்த நிலையில், குடிநீர் இணைப்புக்கு ரூ.28 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் நிறைவு பெற்று மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கபடும்’ என தெரிவித்தார்.
உதகை மரவியல் பூங்காவில் தேசிய பசுமை படை சார்பில், பிளாஸ்டிக் எதிர்ப்பு ( ANTI PLASTIC CAMPAIGN ) விழிப்புணர்வு, நாளை 21 தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் டி .பிரகாஷ் குமார்” நெகிழி இல்லா நீலகிரி விழிப்புணர்வு “பசுமை அட்டையை வெளியிட்டு அனைத்து பேருந்துகளில் காட்சி படுத்துகிறார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாசன் ஏற்பாடு செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.