Thenilgiris

News February 24, 2025

பசுந்தேயிலை உற்பத்தியாளர்களுக்கான முகாம்

image

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை உற்பத்தியாளர்களுக்கான கோரிக்கை முகாம் நாளை (25.02.2025) குன்னூர் சாலையில் உள்ள உதகை ஆவின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சந்திப்பு மற்றும் குறை தீர்ப்பு நாளாக நடைபெற உள்ளது. இதில் கலெக்டர் தலைமை தாங்குகிறார். தேயிலை விவசாயிகள் இம்முகாமில் பங்கு கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். 

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நீலகிரியில் மட்டும் 43 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் <>மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 23, 2025

கூடலூர் தோட்டக்கலைத்துறை அலுவலர் கைது

image

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இரண்டு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்றதாக கூடலூர் தோட்டக்கலை துறை அலுவலர் தயானந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 150 குழாய்களை வெளி நபர்களுக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீத் வழக்கு பதிவு செய்து சதானந்தன், முத்துக்குமார் என்ற மேலும் இதுவரை கைது செய்துள்ளனர்.

News February 23, 2025

நீலகிரி இளைஞர் பலி 4 பேரிடம் விசாரணை

image

தேவர்சோலை அருகே வனவிலங்கு வேட்டையின் போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிர் இழந்தார். கூடலுார் வனஅலுவலர் உத்தரவுப்படி, அப்பகுதியில் வன விலங்கு வேட்டைக்கு சென்றது தொடர்பாக, நவசாத், ஜாபர்அலி,ஐதர்அலி,சதிஷ் ஆகிய 4 பேர் மீது,வனச்சரகர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார். பின் கூடலுார் கோர்ட்டின் உத்தரவு பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு பேரையும் ‘கஸ்டடி’ எடுத்து விசாரணை செய்கின்ரனர்.

News February 23, 2025

பழங்குடி கிராமத்தில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை

image

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள பழங்குடியினர் கிராமமான நஞ்சப்பச்சத்திரம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தினசரி மக்கள் உபயோகிக்கும் பாதையில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாடுவதற்கு சிரமப்படுகின்றனர். வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அடர்ந்த வனத்திற்குள் விரட்ட கோரிக்கை விடுத்தனர்.

News February 22, 2025

மார்க்கெட் கடைகள் இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கடைகளை இடித்து வணிக வளாகம் கட்டும் பணி ஆரம்பமாக உள்ள நிலையில், கடைகளை இடிக்க கூடாது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மார்கெட் இடிக்கும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

News February 22, 2025

Junior Attendant வேலை ரூ.1 லட்சம் வரை சம்பளம்

image

IOCL ஆனது Junior Attendant உள்ளிட்ட 246 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். விணப்பிக்க இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News February 22, 2025

நீலகிரி: பாகுபலி கதாபாத்திரம் போலி ஐடியில் மோசடி!

image

பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயரில் டெலிகிராமில் போலி ஐடி செயல்பட்டு வருகிறது. இதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் வரும் என்ற குறுஞ்செய்தியை நம்பி, குன்னூர் பாதிரியார் ஒருவர் ரூ.6 லட்சம் இழந்தார். மேலும், 25 வயது ஐடி வாலிபர் ரூ.6.20 முதலீடு செய்து இழந்தார். இந்நிலையில், இவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 22, 2025

தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

ஊட்டி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ”நகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான நீராதாரங்களில், 65 சதவீதம் அளவு தண்ணீர் இருப்பில் உள்ளதால்,கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. அவ்வாறு சில வார்டுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டால், நகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து சமாளிக்கப்படும். யாராவது தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

News February 22, 2025

My v3ads-ல் முதலீடு செய்தவரா நீங்கள்?

image

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, நீலகிரி மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!