Thenilgiris

News September 28, 2025

நீலகிரி: டால்பின் நோஸ் வெறிச்சோடியது!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையில் விரிவுபடுத்தும் பணி நடைபெறுவதால், வனத்துறையினர் வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று காட்சி முனையைப் பார்வையிடுகின்றனர். இதன் காரணமாக சுற்றுலாத் தலம் வெறிச்சோடி காணப்படுவதாகக் கூறி, உள்ளூர் மக்கள் வனத்துறையினர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

News September 28, 2025

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அறிய வகை கள்ளி!

image

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உலகின் வறண்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகைக் கள்ளி மற்றும் சக்குலென்ட் செடிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட கண்ணாடி மாளிகையில் இந்தக் கவர்ச்சிச் செடிகள் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வருகின்றன. இது சுற்றுலா கவனத்தை அதிகரித்துள்ளது.

News September 28, 2025

நீலகிரியில்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நீலகிரி: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.18. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நீலகிரி: 8ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

image

நீலகிரி மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நீலகிரி: இனி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

image

நீலகிரி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <>NSDL<<>>
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க…

News September 28, 2025

நீலகிரி: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

image

நீலகிரி: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் இங்கே <>கிளிக்<<>> செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும்.
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

News September 28, 2025

நீலகிரி: டிகிரி போதும் ரயில் துறையில் வேலை!

image

நீலகிரி மக்களே தேசிய அளவில் ரயில்வேயில் காலியாக உள்ள 368 (RRB Section Controller) காலிப்பணியிடங்கலுக்கு நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தாள் போதும் ரூ.35,000 முதல் ரூ.45,000 சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் (14.10.25) ஆகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நீலகிரி அருகே 2 பஸ்கள் மோதி பயங்கர விபத்து

image

கூடலூரில் இருந்து ஊட்டிக்குச் சென்ற கேரளா சுற்றுலா பேருந்து மற்றும் மைசூருக்குச் சென்ற கர்நாடகா அரசு பேருந்து தவளமலை பகுதியில் நேருக்கு நேர் மோதி 2 பஸ்களும் சேதமடைந்தன. விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தை சீர்செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

News September 28, 2025

நீலகிரியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

image

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள பாட்டவயல் கிராமத்தைத் தாண்டி, வெள்ளரி என்னும் இடத்தில் இன்று மாலை சாலையோரம் ஒரு காட்டு யானை நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்தனர். இந்தப் பகுதியில் பகலிலேயே யானை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடுவதால், பொதுமக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!