India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில் நீலகிரி மாவட்டத்தில் தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதம் ஒன்றுக்கு படித்த தகுதியின்படி 200 முதல் 600 வரை வழங்கப்படுகிறது.இந்த உதவி தொகையினை பெறுவதற்கான விண்ணப்பித்தினை நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையத்தை அணுகி பெற்று தகுத சான்றிதழ் உடன் உதவித்தொகை பெறலாம்.
கடந்த ஜன.13ம் தேதி அன்று இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரில் உதகையில் உள்ள ஓட்டல் மேலாளரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.பொங்கல் தினமான மறுநாள் மிதுன் சக்கரவர்த்தி வேறு ஒரு வேலை விஷயமாக இங்குள்ள மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பிவிட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான் மோசடி நடைபெற்றது தெரிய வந்தது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு, அன்றைய தினம் நீலகிரி மாவட்ட ஆட்சியர், காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டி வீட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொலை கொள்ளை குற்றங்கள் தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்த பிப்ரவரி 4ஆம் தேதி கோவை காவல் அலுவலகத்தில் வருமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.
போலீசார் கூறுகையில்,’இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில்,விலங்கை வேட்டையாட நடந்த துப்பாக்கி சூட்டில் ஜெம்ஷித் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார். அப்போது, அவருடன் சென்ற 4 பேர், அப்பகுதியை சேர்ந்த,9 பேரை அழைத்து,அவர் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக,13 பேர்,கைது செய்யப்பட்டு 3 நாட்டு துப்பாக்கிகள்,2 கார்கள்,தோட்டாக்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான கால நிலை நிலவுவதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களது நாட்டில் நிலவும் அதே காலநிலை இங்கும் நிலவுவதால் மிகுந்த உற்சாகத்துடன் சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்கின்றனர். உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலை மற்றும் படகு இல்லம், போன்ற இடங்களில் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காண முடிகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் வசித்த 14 வயது சிறுமியை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020ம் ஆண்டு வீட்டின் அருகில் வசித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டின் அருண் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். தேவாலா காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நீலகிரி மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தினசரி ஏலத்தின் மூலம் ஊட்டி உருளை கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய ஏலத்தில் ஒரு மூட்டை முதல் ரகம் அதிகபட்சமாக ரூ.1650 க்கும், குறைந்த பட்சமாக ரூ.1000க்கும் விற்பனை ஆனது. இன்றைய ஏலத்தில் மொத்தம் 1200 மூட்டைகள் வரத்தாகின.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3வது டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்ஷித்(37). இவர் சில நாட்களுக்கு முன்பு யானை மிதித்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில், வனத்துறை ஆய்வு செய்து மறுத்ததை அடுத்து போலீசார் விசாரணையில், வேட்டைக்கு சென்ற இடத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு நடந்த கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
நீலகிரி: குன்னுார் மலைப்பாதையில் இரு குழுவாக பிரிந்து, 10 காட்டு யானைகள் உலா வருகின்றன. இவை தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், ‘இப்பகுதியில், 10 யானைகள் இரு பிரிவுகளாக உலா வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் எச்சரிகையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் இரவில் வரும் வாகனங்கள் மிதவேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்’ என்றனர்.
Sorry, no posts matched your criteria.