India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை உயர் நீதிமன்றம் 2019 மே மாதம் வெளியிட்ட தீர்ப்பில், ‘நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், உணவு பொருட்கள் பயன்படுத்த கூடாது’ என தடை விதித்தது. இந்தநிலையில், ஊட்டி ஆர்.டி.ஓ. சதீஷ் குமார் தலைமையில் நேற்று லவ்டேல் பகுதியில் 12 கிலோ பாட்டில்கள் பறிமுதல் செய்து ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது.
1819-ல் நீலகிரியை முதல்முதலாக கண்டுபிடித்து, கட்டமைத்தவர் ஜான் சல்லிவன். நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரும் ஜான் சல்லிவன்தான். ஊட்டி நகரம் மற்றும் ஊட்டி ஏரியை நிர்மாணித்தவரும் இவரே ஆவார். கோவையின் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தபோது, “உழுபவர்க்கே நிலம்” என்பதை அறிவித்து, பட்டா, சிட்டாவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும் ஜான் சல்லிவன்தான்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் மூலம் வரும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்திவிட்டு சுற்றுலா மையங்களை சுற்றியுள்ள நீரோடைகளிலும், வனப்பகுதிகளிலும் தொடர்ந்து வீசப்படுவது நடந்து வருகிறது. குன்னூர் ஆற்றில் வீசப்படும் கழிவுகள் சமவெளியில் உள்ள பவானி ஆற்றில் கலப்பதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் உள்ளதா என்பது குறித்து ஆர்டிஓ சதீஷ்குமார் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தாசில்தார் ஷங்கர் கணேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் லவ்டேல் சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி அருகே மஞ்சூர் எடக்காடு பகுதியில், நேற்று மாலை புலி ஒன்று உலா வந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வுசெய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், எடக்காடு குடியிருப்பு பகுதியில் புலி நடமாடியதாக புரளி கிளப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். பொய் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
குற்றப்புலனாய்வுத் துறை சரகங்களுக்கு விருப்பமுள்ள சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்;ஆலோசகர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 5 சட்ட ஆலோசகர்களை நியமிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டம். விருப்பமுள்ளவர்கள் <
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், தேயிலை தொழிற்சாலைகள் என எடக்காடு பஜார் பகுதியில் மாலை 3 மணி அளவில் பலத்த உறுமல் சத்தத்துடன் ஒரு வீட்டின் வாசல் வழியாக சாலையில் மெதுவாக புலி நடந்து வந்தது. வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், அமர்ந்து கொண்டிருந்த பெரியவர்கள் அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். புலியால் மக்கள் பீதியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ (ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்) மூலம் 399 பேருக்கு, தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிகளுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் ஆகியவைக்கு ரூ.5.26 கோடியில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டி உருளை கிழங்கை, தினசரி ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய ஏலத்தில் முதல் ரகம் ஒரு மூட்டை ஊட்டி உருளை கிழங்கு அதிகபட்சமாக ரூ.2,100 க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,350 க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் 425 மூட்டைகள் வரத்தாகின.
தமிழக வெற்றிக் கழகத்தின் நீலகிரி கிழக்கு மாவட்ட (குன்னூர் தொகுதி, உதகமண்டலம் தொகுதி) செயலாளராக S.பாமா ரமேஷ் என்பவரை, அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், மாவட்ட இணைச் செயலாளராக N.கணேஷ், பொருளாளராக A. ராஜேஷ் குமார், துணைச் செயலாளர்களாக V.ஆனந்த குமார் மற்றும் ஹீனா கௌசர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.