India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிறப்பு மலை ரயில் அக்டோபர் 2,4,17,19 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்தும் 3, 5, 18, 20 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். 2,3,4,5,18,19 ஆகிய தேதிகளில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

நீலகிரியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Asst. Manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே <

நீலகிரி மக்களே.., இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ஹாய் என்று ஆங்கிலத்தில் மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

நீலகிரி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பளம் ரூ20,000 -ரூ.35,400 வரை வழங்கப்படும். இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

நீலகிரி மக்களே.., கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் நடந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களின் விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. ஏதேனும் வதந்தி பரப்புவது தெரிய வந்தால், அல்லது காவல்துறைக்கு தேவைப்பாட்டால் விசாரணை, கைது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜாக்கிரதையுடன் பதிவிட அறிவுறுத்தப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது.இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <

நீலகிரியில் ஆயுத பூஜை (ம) சரஸ்வதி பூஜையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல், விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு பிளாஸ்டிக் பொருட்கள் வைப்பு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளினால் அபராதல் விதிப்பதோடு, பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தேவர் சோலை பஜார் பகுதியில் ஊர் பொதுமக்கள், வியாபார சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர், ஓட்டுநர் மற்றும் சமூக நல அமைப்பினர்கள் சார்பாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் பாஸ்டர் மையம் , கூடலூர் நகராட்சியில் நர்த்தகி திருமணம் மண்டபம் , நெல்லியாளம் நகராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மைதானம் (பாண்டியர் குடோன்) ஆகிய இடங்களிலும் சேரங்கோடு சமுதாய கூடம் , முள்ளிகூர் சமுதாய கூட்டம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது . இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதகை நகரில் கடந்த சில நாட்களாக அரசு தாவரவியல் பூங்கா, கவர்னர் சோலை, வண்டி சோலை உள்ளிட்ட பகுதிகளில் கரடி சுற்றித்திரிகிறது. இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகை வளாகத்துக்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்து, அங்கியிருந்து அலறி ஓடினர். இதையறிந்த அப்பகுதி மக்களும் பீதியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.