Thenilgiris

News February 17, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 17, 2025

நீலகிரி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற திமுக பொறுப்பாளர் 

image

சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள கே.எம்.ராஜூ சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக தேர்தல் பணி செயலாளர், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட அவை தலைவர் போஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News February 16, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு!

image

நீலகிரி மாவட்டம் கல்லார் தூரிப்பாலம் சோதனை சாவடி வழியாக, நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் (E-Pass) பெற்று வருகிறார்களா எனவும், தடைசெய்யப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

News February 16, 2025

நீலகிரி கலெக்டர் திடீர் ஆய்வு

image

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நீலகிரிக்குள் கொண்டு வரப்படுகிறதா என மாவட்ட எல்லையான கல்லாறு பகுதியில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரிக்கு கொண்டு வர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தினார். வாகன ஓட்டிகள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News February 16, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், வரும் 21ஆம் தேதி காலை 11 மணி அளவில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகம் நடைபெறுகிறது . இதில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் சொன்ன குட் நியூஸ்!

image

நீலகிரி முதன்மை கல்வி அதிகாரி, நீலகிரியில் உள்ள எந்த ஒரு அரசு தொடக்க பள்ளியும் மூடப்படவில்லை என அறிவிப்பு. மேலும் நீலகிரி கலெக்டரும் எந்த ஒரு அரசு ஆரம்ப பள்ளியும் மூடப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக 85 பள்ளிகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், எந்தப் பள்ளியையும் மூடக்கூடாது என வலியுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News February 16, 2025

நீலகிரியில் கலப்படம்: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

நீலகிரியில் இத்தலார் உள்ளிட்ட இடங்களில் கேரட் விளைகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரட் கொண்டுவரப்பட்டு ஊட்டி கேரட்டுடன் கலப்படம் செய்து பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தோட்டக்கலை இணை இயக்குநர் தலைமையில் தனி குழு அமைத்து ஏழு நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News February 16, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (15.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 15, 2025

நீலகிரி: பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

image

பிரசவித்த தாய்மார்கள், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் நலம். இதனால் ஆட்சியரை இரத்த உறவை தடுக்க முடியும். 8 மணி நேரம் உறக்கம் அவசியம், குழந்தைக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தாய் பால் புகட்ட வேண்டும், குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக தாய் பால் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

News February 15, 2025

சைரன் சப்தம்: அலறி ஓடிய தொழிலாளர்கள்

image

கேத்தி அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை சிடி பிரிவில் வழக்கம் போல் நேற்று பணி நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மின் மோட்டார் அதிக அளவு சூடு ஏறியதால் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மின் மோட்டாரில் தீ ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தானியங்கி சைரன் ஒலிக்க தொடங்கியதால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

error: Content is protected !!