India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(அக்.6) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 107 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

நீலகிரி வரையாடுகள் குறித்த ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கிய ஈஆர்சி டேவீட்டரின் பிறந்த நாளான அக்டோபர் 7ஆம் தேதி நீலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் 1031 வரையாடுகள் இருந்த நிலையில் தற்போது தமிழக அரசின் நீலகிரி வரையாடு திட்டத்தின் மூலம் 1303 வரையாடுகள் என அதிகரித்துள்ளது. நீலகிரி வரையாடு தமிழகத்தின் மாநில விலங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும்.
5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE)

நீலகிரி மக்களே.., எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு, ஆம்னி பஸ்களில் அதீத டிக்கெட் தொகை, மோசடி போன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க அரசு சார்பாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-24749002, 044-26280445 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே.., வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி தொடர விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கு ரூ.15 லட்சம் வரை தமிழக அரசு சார்பாக கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் அரிய, <

நீலகிரி: ஊட்டி அருகேஎடக்காடு காந்தி கண்டி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு ஸ்ரீசாந்த், கிருத்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று(அக்.6) பைக்கில் இருவரும் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் ஸ்ரீசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், வடகிழக்குப் பருவமழை 2025 தொடங்கவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.10.2025) இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இதில் அடங்கும். பொதுமக்கள் அவசர உதவிக்கு இந்த எண்களைப் பயன்படுத்தலாம்.

நீலகிரி மக்களே.. உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <

நீலகிரி மக்களே இந்த அவசர உதவி எண் எண்கள் கண்டிப்பாக தெரிஞ்சு வெச்சுக்கோங்க;
சாலை விபத்து : 1073, பேரிடர் மேலாண்மை உதவி: 1078. பெண்களுக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவிக்க: 181. குழந்தைகளின் பாதுகாப்பு: 1098. சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363.
காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094. உணவு பாதுகாப்பு துறை அலுவலகம்: 94440-42322. SHARE பண்ணுங்க மக்களே!
Sorry, no posts matched your criteria.