Thenilgiris

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.

News April 11, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , ஊரக கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் இன்று 9ஆம் தேதி காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 0423 2444111 , அவசர உதவிக்கு 100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் .

News April 10, 2025

நீலகிரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பிறருக்கு சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ, கூகுள் பே (GPay), போன்பே (Phonepe), பேடிஎம் (Paytm) போன்ற டிஜிட்டல் முறைகளிலோ, வேறு எந்த வகையிலோ லஞ்சம் கேட்டாலும் DSP ஜெயக்குமார்-94981 47234 சண்முகவடிவு (Inspector): 94981 24373  உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2025

நீலகிரி: ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு APPLY NOW!

image

நீலகிரி, மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.இதற்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News April 10, 2025

நீலகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்.10) பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 9, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம், ஊரக கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் இன்று 9ஆம் தேதி இரவு, காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 0423 2444111, அவசர உதவிக்கு 100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 9, 2025

நீலகிரியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

image

நீலகிரி, வெலிங்டனில் ராணுவ அதிகாரிகளின் மத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 6.30 மணி அளவில் கோவை வந்து அடைந்தார். தற்போது பலத்த பாதுகாப்புடன், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்தடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர்.

News April 9, 2025

நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 இலவச பயிற்சி 

image

குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட தொழிலாளி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 8056358107, 7200019666 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

குன்னூரில்அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

image

அதிகரட்டி பகுதியை சேர்ந்த ஜோகி,கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த,தி.மு.க. வார்டு கிளை செயலாளர் ரகீம்,ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அனிதா,சந்தோஷ்குமார், சதீஷ்குமார்,மஞ்சுநாதன் ஆகியோரிடம்,14 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றிருந்தனர்.வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் கொடுத்த புகாரில் நடந்த வழக்கை விசாரித்த குன்னூர் நீதிபதி அப்துல்சலாம் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

News April 9, 2025

நீலகிரியில் டாஸ்மாக் கடைகள் மூட உதித்தரவு!

image

மகாவீர் ஜெயந்தி தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள், ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடவேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!