Thenilgiris

News October 18, 2025

நீலகிரியில் வசமாக சிக்கிய நபர்: போலீஸ் அதிரடி

image

கூடலூர் அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் அனிபா. நள்ளிரவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டு அனிபா எழுந்தார். பின்னர் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சசமயம் வாலிபர் தப்பி ஓடினார். இது குறித்து அனிபா கூடலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருட முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஷெரீப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News October 18, 2025

நீலகிரி: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

image

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர் மோப்ப நாயுடன் விரைந்து சென்று பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 18, 2025

உதகை ஆங்கில பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் ஆங்கில பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்பு போலீஸ் குழுவினர் மோப்ப நாயுடன் விரைந்து சென்று பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு புரளி என தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 17, 2025

நீலகிரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கோரினர்.

News October 17, 2025

நீலகிரி: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

image

நீலகிரி மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை (அக்.18) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

தேவர்சோலை: சாலையோரம் பதுங்கி நின்ற யானை!

image

தேவர் சோலை பேரூராட்சி மூன்றாவது மைல், மஞ்சமுலா, பாடந்துறை பகுதிகளில் பல மாதங்களாக யானை ஒன்று சுற்றி வருகிறது. மேலும் நேற்றைய தினம் இரவு மூன்றாவது மைல் பகுதியில் பிரதான சாலை அருகே இந்த ஒற்றை யானை சாலையோரம் உள்ள புதர்களுக்கிடையே மறைந்து இருந்த நிலையில் காணப்பட்டதை கண்ட சாலையில் பயணித்த வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர். மேலும் இந்த யானையை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

News October 17, 2025

நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை பெறலாம்.

News October 17, 2025

நீலகிரி: கல்விக்காக ஓர் முன்னேற்றம் – 116 பேர் பயன்!

image

நீலகிரி பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நீலகிரியில் உள்ள கார்குடி, பொக்காபுரம், குஞ்சப்பனை உள்ளிட்ட மூன்று பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்காக, 3 சிறிய ரக வாகனங்களும் வழங்கப்பட்டது. குஞ்சப்பனை பள்ளிக்கு 25 மாணவர்களும், பொக்காபுரம் பள்ளிக்கு 27 மாணவர்களும், கார்குடி பள்ளிக்கு 64 மாணவர்களும், என மொத்தம் 116 மாணவர்கள் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

News October 17, 2025

நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை பெறலாம்.

News October 17, 2025

நீலகிரி: நாளை மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

image

ஊட்டி மலர் பெட்டு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஊட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஊட்டி நகரம் பிங்கர் போஸ்ட் காந்தல் தமிழகம்,கேத்தி,இத்தலார் ஆகிய பகுதிகளிலும், மலர் பெட்டு துணை மின் நிலையத்திற்குட்பட்ட தேனாடுகம்பை ஆடாசோலை, கடநாடு எப்பநாடு,மரகள் கோழிப்பண்ணை, உள்ளத்தி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!